Skip to main content

Posts

புனிதமான கங்கை நதியின் மகிமையும் தவளைகளின் மோக்ஷ பிராப்தியும்

முன்னொரு காலத்தில், இந்த பூமியில் சத்தியதர்மா என்றொரு அரசர் வாழ்ந்து வந்தார். அவரது அரசியின் பெயர் விஜயா . அவள் நற்குணமும் அழகும் பொருந்தி, தன் கணவருக்குச் சேவை செய்வதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவள். பூவுலகில் ஏழாயிரம் ஆண்டுகள் எல்லா இன்பங்களையும் அனுபவித்த அந்த தம்பதியினர், ஒரு நாள் மரணமடைந்தனர். உடனே, மரணத்தின் அதிபதியான யமராஜரின் தூதர்கள் அவர்களைப் பாசக்கயிற்றால் கட்டி, நரக வேதனை தரும் வழியே யமலோகத்திற்கு இழுத்துச் சென்றனர். அவர்களைப் பார்த்த தர்மராஜர் (யமராஜர்) ,   சித்திரகுப்தனை அழைத்து, "இவ்விருவரின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பற்றி நமக்குக் கூறு," என்று கட்டளையிட்டார். சித்திரகுப்தனும் அவர்களது பிறப்பு முதல் செய்த செயல்களை ஆராய்ந்து, "ஹே பிரபு, கேளுங்கள்! முன்னொரு காலத்தில், புலிகளால் துரத்தப்பட்ட மான் ஒன்று தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடி வந்து, இந்த அரசரின் சபையில் அடைக்கலம் புகுந்தது. ஆனால், அந்த மானைக் கண்ட அரசர், இரக்கமில்லாமல் தன் வாளினால் அதன் இடுப்பில் பலமாக வெட்டினார். தன்னிடம் தஞ்சம் புகுந்த ஒரு ஜீவனைக் காப்பாற்றாமல் வதைத்ததால், இந்த அரசரும் இவரது மனைவிய...

ஆபத்தான சந்தேகம்... அழிவை தரும் அதீத ஆர்வம்!

ஆன்மீகப் பாதையில் முன்னேற விரும்புபவர்களுக்கு 'ஸ்ரத்தா' எனப்படும் தூய நம்பிக்கை மிக மிக முக்கியமானது. இந்த நம்பிக்கையை நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், தேவையில்லாத சந்தேகம், சிற்றறிவால் விளையும் அதீத ஆர்வம் போன்ற ஆபத்தான பள்ளங்களால் இந்த நம்பிக்கை எளிதில் பலவீனமடைந்துவிடக்கூடும். நம்பிக்கையின் இந்த பலவீனமான தன்மையை விளக்குவதற்கு ஒரு அழகான சீடனின் கதை கூறப்படுகிறது. அந்தச் சீடன் தினமும் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வைத் தேடி, அந்த ஆற்றைக் கடக்க தனக்குத் தொடர்ந்து உதவக்கூடிய ஒரு வழியைக் காட்டுமாறு தன் குருதேவரிடம் அவன் வேண்டினான். அதற்கு அவனது குரு, ஒரு காகிதத்தில் ஏதோ ஒன்றை எழுதி, அதை ஒரு சிறிய மஞ்சூஷாவுக்குள் (தாயத்துக்குள்) வைத்து முத்திரையிட்டு, ஒரு மோதிரத்துடன் இணைத்து அந்தச் சீடனிடம் கொடுத்தார். அதை பத்திரமாக அணிந்துகொண்டு செல்லுமாறு குரு அவனுக்குக் கட்டளையிட்டார். தன் குரு தமக்கு ஒரு சக்திவாய்ந்த ஆன்மீகப் பொருளை வழங்கியிருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் (ஸ்ரத்தையுடன்) அந்தச் சீடன் தண்ணீரின் மீது நடக்க...

முதிர்ந்த பக்தர் யார்? ஓர் விளக்கம்"

நாரதிய புராணத்தின் ஶ்ரீ ஹரி-பக்தி-சுதோதயாவின் 18-ஆம் அத்தியாயத்திலிருந்து ஒரு ஆன்மீகக் கதை முற்காலத்தில் கங்கைக் கரையில் முனிவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளையும் தத்துவங்களையும் பற்றித் தங்களுக்குள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில், ஏழு கல்பங்கள் ஆயுள் கொண்ட மகாமுனிவரான மார்க்கண்டேய ரிஷி அங்கு எழுந்தருளினார். [ஒரு கல்பம் என்பது சுமார் 432 கோடி பௌதிக வருடங்களாகும்.] அவர் வந்தவுடன், அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்குத் தங்களது மனமார்ந்த வணக்கங்களைச் செலுத்தி, அமர்வதற்கு உயரிய ஆசனத்தை அளித்து கௌரவித்தனர். அப்போது மார்க்கண்டேய ரிஷி, தன் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த பராசரர் என்ற சிறுவனைக் கவனித்தார். அச்சிறுவனுக்கு வெறும் ஏழு வயதே ஆகியிருந்தபோதிலும், மார்க்கண்டேயர் தன் ஆசனத்திலிருந்து கீழே இறங்கி, அந்தச் சிறுவனுக்குத் தனது சாஷ்டாங்க வணக்கங்களைச் செலுத்தினார். இதைக் கண்ட அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் அளவற்ற வியப்பும் குழப்பமும் அடைந்தனர். உடனே பராசரர் திடுக்கிட்டு எழுந்து, முதியவரான மார்க்கண்டேய ரிஷியின் திருவடிகளில் விழு...

பகவானின் கதையும் கண்டாபரணமும்: அசுர சிக்ஷையும் பக்த ரக்ஷையும்

கௌமோதகீம் பகவதோ தயிதாம் ஸ்மரேததிக்தாமராதிபடசோணிதகர்தமேன மாலாம் மதுவ்ரதவரூதகிரோபகுஷ்டாம்  சைத்யஸ்ய தத்வமமலம் மணிமஸ்ய கண்டே மொழிபெயர்ப்பு   யோகி அவருக்கு மிகவும் அன்பான, கௌமோதகீ எனப் பெயருடைய அவருடைய கதாயுதத்தைத் தியானிக்க வேண்டும். இந்தக் கதை, பகைமையுடைய வீரர்களான அரக்கர்களைத் தகர்த்து அவர்களின் குருதியால் பூசப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள அழகிய மாலையின் மேல் கவனம் செலுத்த வேண்டும், அந்த மாலை எப்போதும் ரீங்காரமிடும் வண்டுகளால் சூழப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள முத்தாரத்தைத் தியானிக்க வேண்டும், அது எப்போதும் அவரது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தூய உயிரினங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பொருளுரை   யோகி பகவானுடைய தெய்வீக உடலின் பல்வேறுபட்ட உறுப்புகளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உயிரினங்களின் உடலமைப்பு நிலை புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இங்கு உயிரினங்களில் இரண்டு வகைகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று அராதி எனப்படுகிறது. அவை பரம புருஷ பகவானின் லீலைகளைப் புரிந்துகொள்வதை வெறுக்கின்றன. பகவான் தன் கையில், எப்போதும் அசுரர்களைக் கொன...

பகவத் கடாக்ஷம்: பக்தர்களின் துன்பங்களை முற்றிலும் நீக்கும் துக்க நிவாரணி

தஸ்யாவலோகமதிகம் க்ருபயாதிகோர தாபத்ரயோபசமனாய நிஸ்ருஷ்டமக்ஷ்ணோ:   ஸ்நிக்தஸ்மிதாநுகுணிதம் விபுலப்ரஸாதம் த்யாயேச்சிரம்விபுலபாவனயா குஹாயாம் மொழிபெயர்ப்பு யோகிகள் முழு பக்தியுடன் பகவானின் கண்களிலிருந்து அடிக்கடி வீசும் அன்புப் பார்வைகளை ஆழ்ந்து நினைக்க வேண்டும். ஏனெனில், அவரது பக்தர்களின் அச்சம் தரத்தக்க மூன்று வித வேதனைகளுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன. இனிய புன்சிரிப்பினைத் தொடர்ந்துவரும் அவரது பார்வைகள் அதிகமான அருள் நிறைந்தவை. பொருளுரை ஒருவர் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வில், இந்த ஜடவுடலில் இருக்கும் வரை அவர் கவலைகள், வேதனைகளால் துன்பப்படுதல் இயற்கையானது. ஒருவர் உன்னதமான இருப்பிடத்தில் இருந்தபோதிலும், அவர் ஜட சக்தியின் பாதிப்பைத் தவிர்க்க முடியாது சில சமயம் தொல்லைகள் வருகின்றன. ஆனால் பக்தர்களின் கவலைகளும் வேதனைகளும், அவர்கள் பரம புருஷ பகவானை அவருடைய அழகிய வடிவத்தில் அல்லது பகவானின் சிரித்த முகத்தை நினைக்கும் பொழுது உடனே தணிக்கப்படுகின்றன. பகவான் தன் பக்தர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அளிக்கிறார். அவர் அருளின் மிகச்சிறந்த வெளிப்பாடு, அவரது பக்தர்களுக்கான கருணை நிறைந்த புன்சிரிப்பு நிறைந்த முகமாக...

பக்தவத்சலன்

  ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ ந ஸ்வாத்யாயஸ் தபஸ் த்யாகோ யதா பக்திர் மமோர்ஜிதா மொழிபெயர்ப்பு உத்தவா, எனது பக்தர்களால் எனக்கு ஆற்றப்படும் கலப்படமற்ற தூய பக்தித் தொண்டானது என்னை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறது. ஆனால் அஷ்டாங்க யோகம், சாங்க்யத்துவம், புண்ணியச் செயல், வேதக் கல்வி, தவம் அல்லது துறவு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்களால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. பொருளுரை ஒருவன் ஶ்ரீ கிருஷ்ணரையே அஷ்டாங்க யோகம், சாங்க்ய தத்துவம் போன்ற முறைகளின் இலக்காகக் கொண்டிருக்கக்கூடும்; எனினும் பகவானைப் பற்றி கேட்டல், பாடுதல் மற்றும் அவரது நோக்கத்தை நிறைவேற்றுதல் ஆகியவற்றினால் பகவானின் நேரடியான அன்புத் தொண்டில் ஈடுபடுவது எந்த அளவுக்கு பகவானைத் திருப்திப்படுத்துமோ, அந்த அளவுக்கு மற்ற சமய முறைகள் திருப்திப்படுத்துவதில்லை. ஶ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஞான-கர்மாதி-அனாவ்ருதம் : ஒரு பக்தன் ஶ்ரீ கிருஷ்ணரை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். அவன் தனது அன்புத்தொண்டை கர்மத்திலோ, மனோ தத்துவ ஊகத்திலோ சிக்கவைக்கக்கூடாது. பிருந்தாவன வாசிகள் எப்பொழுதும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரையே...

மனதைக் கட்டுப்படுத்த எளிய வழி: மூச்சுப் பயிற்சியா அல்லது ஶ்ரீ கிருஷ்ண நாம ஜபமா?

ப்ராணஸ்ய சோதயேந்மார்கம் பூரகும்பகரேசகை:  ப்ரதிகூலேன வா சித்தம் யதா ஸ்திரமசஞ்சலம் மொழிபெயர்ப்பு யோகி பின்வரும் முறையில் சுவாசித்து உயிர் நிலைக் காற்றின் வழியைச் சுத்தமாக்க வேண்டும். முதலில் அவர் மிக ஆழ்ந்து உள்ளிழுக்க வேண்டும், பின்னர் மூச்சைத் தக்க வைக்க வேண்டும், இறுதியாக வெளிவிட வேண்டும். அல்லது அந்த முறையை நேர்மாறாக்கலாம், யோகி முதலில் வெளிவிட்டு, பின்னர் மூச்சை வெளியில் தக்க வைத்து, இறுதியாக உள்ளிழுக்க முடியும். இவ்வாறு செய்யப்படும் போது மனம் உறுதி கொண்டு, வெளிப்புறத் தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது. பொருளுரை இத்தகைய சுவாசிக்கும் பயிற்சிகள் மனதைக் கட்டுப்படுத்தவும் அதைப் பரம புருஷ பகவான் மேல் ஈடுபடுத்தவும் செய்யப்படுகின்றன. ஸ வை மன: க்ருஷ்ண பதாரவிந்தயோ: பக்தராகிய அம்பரீஷ மஹாராஜா தன் மனதை ஒரு நாளின் 24 மணி நேரமும் கிருஷ்ணரின் பாத கமலங்களில் ஈடுபடுத்தி இருந்தார். கிருஷ்ண உணர்வு முறை என்பது ஹரே கிருஷ்ண என்பதை உச்சரிப்பதும் கவனமாக அந்த ஒலியைக் கேட்பதுமாகும். இதனால் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதாகக் கூறமுடியாத கிருஷ்ணருடைய பெயரினை உச்சரிக்கும் ஒலி அதிர்வின் மீது நம் மனமானது நிறுத்தப்ப...