Skip to main content

Posts

கோபேஷ்வர மகாதேவர்

வைஷ்ணவர்களில் சிறந்தவராகவும் (வைஷ்ணவானாம் யதா ஷம்பு), மகா ராசலீலை மண்டபத்தின் காவலராகவும் விளங்கும் கோபேஷ்வர் மகாதேவரின் தாமரை பாதங்களில் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான மகா ராசலீலையில் நாம் நுழைவதற்குப் பெருங்கருணையுடன் அனுமதி வழங்குபவர் அவரே. விருந்தாவனம்  என்றாலே அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய லீலைகள் நடைபெறும் இடமாகும். அங்கே யமுனை நதிக்கரையில், அதீத புனிதம் வாய்ந்த 'வம்சி வடம்' பகுதியில்  கோபேஷ்வர் மகாதேவர்  திருக்கோவில் அமைந்துள்ளது.  "வைஷ்ணவானாம் யதா ஷம்பு" — வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான். அந்த மகாதேவன், கிருஷ்ண பிரேமையைப் பெறுவதற்காக ஒரு கோபியின் உணர்வில் (பவத்தில்) வீற்றிருக்கும் இடமே இத்தலமாகும். ஆலயத்தின் மேன்மையும் தத்துவமும் விருந்தாவனத்தின் மிகத்தொன்மையான இந்த ஆலயத்தில், சிவபெருமான் சிவலிங்க வடிவில் இருந்தாலும், மாலையில் அவர் கோபி வேடத்தில் அலங்கரிக்கப்படுகிறார். இது வெறும் சடங்கல்ல; மாறாக, பகவான் கிருஷ்ணரின் அந்தரங்க லீலைகளில் பங்கேற்க ஜட உடலோ அல்லது அகங்காரமோ தடையாக இருக்கக்கூடாது ...

நந்தி தேவர்: பகவான் கிருஷ்ணரின் அம்சமான சிவ வாகனம்

நந்தி தேவர்:  பகவான் கிருஷ்ணரின் அம்சமான சிவ வாகனம் பிரம்ம வைவர்த்த புராணம், கிருஷ்ண ஜன்ம கண்டம் (அத்தியாயம் 36) - ஒரு தொகுப்பு சிவபெருமானின் வாகனமாகத் திகழும் நந்தி தேவரின் மர்மமான தோற்றம் குறித்து பிரம்ம வைவர்த்த புராணம் விரிவாக விளக்குகிறது. பிரம்ம கண்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில், ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் இடது பாகத்திலிருந்து தோன்றியபோது, அவருடன் கோடிக்கணக்கான கோபிகைகளும் கோபர்களும் உருவானதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தத் தருணத்தில், கிருஷ்ணரின் திருமேனியிலிருந்து உன்னத வகை சுரபிப் பசுக்களும், காமதேனுக்களும், பலம் பொருந்திய காளைகளும் தோன்றின. அப்போது, பத்து கோடி சிங்கங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு அழகான காளையை, சிவபெருமான் ஏறிச் செல்வதற்காகக் கிருஷ்ணர் பரிசாக அளித்தார். பகவானின் திருமேனியிலிருந்து வெளிப்பட்டதால், நந்தி தேவர் கிருஷ்ணரின் அம்சம் அல்லது விரிவாகவே கருதப்படுகிறார். இக்கருத்தை உறுதிப்படுத்தும் மற்றொரு வரலாறு கிருஷ்ண ஜன்ம கண்டத்தின் 36-வது அத்தியாயத்தில் (பாடல்கள் 42 முதல் 57 வரை) பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ண-ஜன்ம-கண்டம்...

"ஹரிநாம சங்கீர்த்தனம்: சிவபெருமானின் பக்திப் பேராவல்"

சிவனின் நாம பஜனம் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யரான  ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, 'பக்தி ரசாமிர்த சிந்து' என்னும் நூலின் நாற்பத்தி மூன்றாம் அத்தியாயத்தில், கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் சிவபெருமானுக்கு இருக்கும் அளவற்ற ஈடுபாட்டைப் பின்வருமாறு விவரிக்கிறார்: மாமுனிவர் நாரதர் எம்பெருமானின் புகழைப் பாடிக்கொண்டிருந்தபோது, அதைக் கேட்டு மெய்மறந்த சிவபெருமானின் கழுத்தில் இருந்த நீல நிறக் கோடு மறைந்து போயிற்று. இதைக் கண்ட அவருடைய மனைவி கௌரி தேவி, தன் கணவருக்குப் பதில் வேறு யாரோ உருமாறி வந்திருப்பதாக ஐயமுற்று, அச்சத்தினால் உடனடியாக அவ்விடத்தை விட்டு அகன்றார். சிவபெருமானைத் திருமணம் புரியப் பணித்த கிருஷ்ணன் சிவபெருமான் கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர் என்பது மட்டுமல்லாமல், அதைத் தியானிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்த உண்மை பல்வேறு வேத இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிரம்ம வைவர்த்த புராணத்தில் (1.6.4-16) கிருஷ்ணருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடந்த உரையாடல் இவ்வாறு விவரிக்கப்படுகிறது: யோகிகளுள் சிறந்தவராகப் போற்றப்படும் சிவபெருமானை ஒருமுறை...

மிக சிறந்த வரமும் மிக உயர்ந்த செல்வமும்

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையில் வாடிய ஒரு அந்தணர், தனது துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற வேண்டி சிவபெருமானைக் குறித்துத் தவம் இருந்தார். சிவபெருமான் 'மிதுஷ்டமா' (வாரி வழங்குபவர்களில் சிறந்தவர்) என்று அழைக்கப்படுபவர். உலகாயத ஆசைகள் கொண்ட பலர் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள அவரையே அணுகுவர். ஆனால், இந்த அந்தணரின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அவருக்கு வெறும் அழியும் செல்வத்தைத் தராமல், அவரது ஆன்மீக வாழ்விற்குத் தேவையான 'உயரிய அருட்பேற்றினை' வழங்கத் திருவுளம் கொண்டார். சிவபெருமான் அந்த அந்தணரிடம், "பிருந்தாவனத்தில் வசிக்கும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் நெருங்கிய சீடரான சநாதன கோஸ்வாமியைச் சென்று பார். அவரே உனக்கு உலகிலேயே மிகச்சிறந்த செல்வத்தை வழங்க வல்லவர்" என்று வழிகாட்டினார். சநாதன கோஸ்வாமியும் குப்பையில் கிடந்த செல்வமும் சிவபெருமானின் அறிவுரைப்படி அந்த அந்தணர் பிருந்தாவனம் சென்று சநாதன கோஸ்வாமியைச் சந்தித்தார். எளிமையே உருவான ஸ்ரீல  சநாதன  கோஸ்வாமி, யமுனை நதிக்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து எப்போதும் ஹரி  நாமத்தை ஓதிக் கொண்டிருந்தார். அந்த...

ஸ்ரீ மத்வாசாரியர்

   பக்தி நெறி பரப்பிய ஞானச் சுடர் - ஸ்ரீ மத்வாசாரியர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாரதத் திருநாட்டில் உதித்த ஒப்பற்ற தத்துவ ஞானியும், ஆன்மீக வழிகாட்டியுமான ஸ்ரீ மத்வாசாரியர், ஆன்மீக உலகில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர். துவைதக் கோட்பாட்டை (இருமைத் தத்துவம்) நிலைநாட்டியும், பக்தி யோகத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. மத்வாசாரியரின் அவதாரத் திருநாளில், அவரது வியக்கத்தக்க வாழ்க்கை வரலாற்றையும், அவர் போதித்த உயரிய தத்துவங்களையும் சிந்திப்பது நமக்குப் பெரும் புண்ணியமாகும். பரம்பரை பரம்பொருள் மகாவிஷ்ணு, இந்த பிரபஞ்சத்தின் உன்னத ரகசியங்களை நான்கு பெரும் ஆளுமைகளுக்கு உபதேசித்தார். அன்னை லட்சுமி தேவி, சிவபெருமான், பிரம்ம தேவன் மற்றும் நான்கு குமாரர்கள் ஆகியோரே அந்த நால்வர். இந்த நான்கு வழிகளில் இருந்தே நான்கு புனிதமான ஆன்மீக மரபுகள் அல்லது 'சம்பிரதாயங்கள்' தோன்றின: ஸ்ரீ சம்பிரதாயம்: லட்சுமி தேவி வாயிலாக ராமானுஜாசாரியருக்குக் கிடைத்த ஞானவழி. ருத்ர சம்பிரதாயம்: சிவபெருமான் வாயிலாக விஷ்ணு சுவாமிக்கு அருளப்பட்ட நெறி. பிரம்ம சம்பிரதாயம்: பிரம்...