பதம் 10 க்ரீணீஹி போ: ஃபலானீதி ஸ்ருத்வா ஸத்வரம் அச்யுத: ஃபலார்தீ தான்யம் ஆதாய யயௌ ஸர்வ-ஃபல-ப்ரத: மொழிபெயர்ப்பு ஒரு சமயம் பழ வியாபாரி ஒருத்தி, “விரஜவாசிகளே, நீங்கள் பழங்கள் வாங்க விரும்பினால் இங்கு வாருங்கள்!” என்று கூவியழைத்தாள். இதைக் கேட்ட கிருஷ்ணர், தமக்குச் சில பழங்கள் தேவைப்பட்டது போல், உடனே கொஞ்சம் தானியங்களை எடுத்துக் கொண்டு பண்டமாற்று செய்து கொள்ளச் சென்றார். பொருளுரை ஆதிகுடிமக்கள் பொதுவாக பழங்கள் விற்பதற்காக கிராமவாசிகளிடம் செல்வார்கள். அவர்கள் கிருஷ்ணரிடம் எந்த அளவுக்குப் பற்று கொண்டிருந்தனர் என்பது இங்கு விவரிக்கப்படுகிறது. கிருஷ்ணர், ஆதிகுடிமக்களுக்கு ஆதரவு காட்டுவதற்காக, உடனே பழங்களை வாங்கச் செல்வார். மற்றவர்களைப் போலவே, பண்டமாற்று செய்து கொள்ள கையில் அரிசியுடன் செல்வார். பதம் 11 ஃபல-விக்ரயிணீ தஸ்ய ச்யுத-தான்ய-கர-த்வயம் ஃபலைர் ஆபூரயத் ரத்னை: ஃபல-பாண்டம் அபூரி ச மொயிபெயர்ப்பு கிருஷ்ணர் பழக்காரியை நோக்கிக் விரைந்து செல்லும் பொழுது. அவர் பிடித்திருந்த தானியங்களில் பெரும் பகுதி கொட்டிவிட்டது. இருபப்பினும், பழக்காரி கிருஷ்ணரின் கரங்களைப் பழங்களால் நிரப்பி...