யமுனாசாரியர் (ஆளவந்தான் )
🔆🔆🔆🔆🔆🔆🔆
வைஷ்ணவ ஆசாரியராகிய யமுனாசாரியர் நாதமுனிகளின் பேரனாக ஈசுவரமுனிக்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார்கோயிலில்) கிபி.912 ஆம் ஆண்டு (கிபி918 என்றும் கிபி976 என்றும் சொல்லப்படுகிறது) பிறந்தார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். இவர் இராமானுசரின் முதன்மை குருவும்மாவார். அவரது வாழ்வில் சில பகுதிகள் இங்கே காணலாம்.
ஆளவந்தான்
🔆🔆🔆🔆🔆🔆🔆
பாஷ்யாசாரியரிடம் யமுனா (யமுனாசார்யர் ) பால கல்வி பயின்று வந்த காலத்தே பாஷ்யாசாரியர்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்யாசாரியர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்தே இக்கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட பாஷ்யாசாரியர் வருத்தம் தீரும் வண்ணம், யமுனாசார்யர் தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாகவும் ஆயினும் உரிய மரியாதை அளித்தால் ஒழிய தான் அரசவைக்கு வரவிரும்பவில்லை என்றும் அரசவைக்கு மறுவோலை அனுப்பினார். செய்தி அறிந்த அரசன் பல்லக்கு அனுப்பி அவரை அவைக்கு அழைத்துவந்தான். அவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனாசார்யர்க்குமிடையே சொற்போர் நடந்தது. அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனாசார்யர் அழகில் மயங்கி, இவர் ஆணவம்கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார் என்று அரசனிடம் கூறினார். மறுதளித்த அரசன் மிகுந்த அறிவாளியாகிய ஆக்கியாழ்வான் தோற்றால் தன் நாட்டில் பாதியை யமுனாசார்யர்க்குத் தருவதாக அரசன் அரசியிடம் கூறினான்.அரசியோ ஒருவேளை இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி எனும் நிலையைவிட்டு அந்தப்புரத்தில் ஒரு பணிப்பெண்ணாக இருந்து உமக்கு சேவை செய்வேன் என்றாள்.
சொற்போரில் ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடைபகன்ற யமுனாசார்யர், இம்முறை தாம் மூன்றே கூற்றுகளை கூறுவதாகவும் அவற்றை மறுத்தால் தான் தோற்றதாகவும் அறிவித்து "உமது தாய் மலடி அல்லள், இந்த அரசன் தர்மவான், அரசபத்தினி பதிவிரதை" என்று கூறி மறுக்கச் சொன்னார். ஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இக்கூற்றை யமுனாசார்யர் மறுத்து மெய்ப்பிக்கமுடியுமோ என்று அரசன் வேண்ட யமுனாசார்யர் பின்வருமாறு மறுத்தார்.
1.ஆக்கியாழ்வான் தன்தாய்க்கு ஒரே மகன். ஒருமரம் தோப்பாகாது. அதுபோல ஒருபிள்ளை பெற்றவள், சாத்திரப்படி மலடி. எவ்வாறெனில் அக்குழந்தைக்கு துர்மரணம் நேர்ந்தால் அவளை தாயென்று கொண்டாட மற்ற பிள்ளைகள் இல்லையாதாலால் மலடி என்று முதலாவது கூற்றை மறுத்தார்.
2.அரசன் தர்மவானாக இருந்தாலும் தன் குடிமக்கள் செய்த பாவங்கள் யாவும் அறநெறிப்படி அரசனையே சாரும். ஆகையால் இந்த அரசன் அறநெறியாளன் அல்லன் என்று சொல்லி இரண்டாவது கூற்றை மறுத்தார்.
3.ஒவ்வொரு திருமண வைபவங்களிலும் மணமகன் சொல்லும் தோத்திரங்களில் ஒன்று "இவளை சந்திரன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய தேவர்களிடம் இருந்து பெறுகிறேன்" என்பதாகும். மக்கட்செல்வம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இத்தேவதைகளின் ஆசிபெறுவதற்காக சொல்லப்படுவது. அவ்வாறெனில் இவ்வாக்கியப்படி ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இந்நிலவுலகில் வாய்க்கும் கணவன் என்பவன் நான்காமவனாக கருதப்படுவான். இதற்கு உட்பட்ட இவ்வரசியும் கற்புக்கரசி அல்லள் என்று மூன்றாவது கூற்றையும் மறுத்தார். சொற்போரில் வென்றார்.
இவற்றை செவிமடுத்த அரசி மிக்க மகிழ்ச்சிக்கொண்டு அந்த ஞானக்குழந்தை முன் மண்டியிட்டு நீர் எம்மை ஆளவந்தவரோ? என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அரசன் தான் கூறியபடி வென்ற யமுனாசார்யருக்கு தன் நாட்டில் பாதியைத் தந்தான். அன்றிலிருந்து அரசியின் வாக்குப்படி ஆளவந்தார் எனும் பெயரோடு அரசாட்சி செய்துவந்தார்.
ஆளவந்தார் அரசப் போகத்தில் திளைத்து வழிபிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி (இராம மிஸ்ரர் ) தன் குருவின் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்கு செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளை காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார். ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால் ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக ஆறுமாத காலம் தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்கு தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார். சிலநாட்கள் கீரையை உணவில் காணாத அரசனான ஆளவந்தார் சமைப்பவர்களை கேட்க, அவர்கள் யாரோ ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூற, இதில் ஏதோ நுட்பம் இருப்பதை உணர்ந்த ஆளவந்தார் அடுத்த முறை அப்பெரியவர் வருவாறாயின் தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார் உமக்கு என்ன வேண்டுமோ கேள் என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். ஆளவந்தார் தருமாறு வேண்ட மணக்கால் நம்பி, ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனிகள் இறைவனடி சேர்ந்தார் எனவும். அவர் உயிர் பிரியும் சமயத்தில் குலதனத்தை( குடும்ப சொத்து) தன் பேரனிடம் சேர்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
ஆளவந்தார் அதை பெற விரும்பம் தெரிவிக்க.மணக்கால் நம்பி, அது இங்கில்லை திருவரங்கம் கோவிலில் உள்ளது என்று உறைத்து. இருவரும் திருவரங்கம் நோக்கி பயணமானார்கள்.போகும் வழியில் நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார்.
திருவரங்கம் வந்து ஶ்ரீ ரங்க நாதரை காண்பித்த மறுகணமே பகவான் ஆளவந்தவரை ஆட்கொண்டார்.ஆளவந்தார் ஶ்ரீரங்கநாதரை பிரிய மனமில்லாமல் அங்கேயே தங்கி பகவத் கைங்கர்யத்திற்கு தயாரானார். அந்த கணமே அரச பதவியை துறக்க தீர்மானித்தார்.
தன்து காரணமற்ற கருணையால் ஶ்ரீ வைஷ்ணவ சமயத்திற்கு ஆளவந்தவரும் ஆனார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment