ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பொக்கிஷமாவர்.
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
ஒருமுறை ஸ்ரீமதி ராதாரணியும் பகவான் கிருஷ்ணரும் மற்ற சகிகளுடன் நீராடிக்கொண்டிருந்தனர். நீராடி முடித்தவுடன், அவர்கள் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் அங்கு ஒரு ஏழை பிராமணர் வந்தார். அவர், "எனக்கு திருமண வயதில் ஒரு புதல்வி இருக்கிறாள். என்னிடம் பணம் இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை. ஆகையால் எனக்கு பண உதவி செய்யுங்கள்", என்று கேட்டார்.
இதை கேட்ட பகவான் கிருஷ்ணர், " ஸ்ரீமதி ராதா தான் என்னிடம் உள்ள செல்வங்களில் சிறந்தவர். ஆகையால் என்னுடைய சொத்தான அவரை எடுத்துக்கொள்ளுங்கள் ", என்று பதிலளித்தார். இதை கேட்ட பிராமணர் தன் தலையில் அடித்துக்கொண்டு, "என்னுடைய ஒரு புதல்விக்கே திருமணம் செய்ய முடியாமல் நான் தவிக்கின்றேன். நீங்கள் செல்வத்திற்கு பதிலாக இன்னொரு புதல்வியை தருகிறேன் என்று கூறுகிறீர்கள்", என்று கூறினார்.
இதை கேட்ட கிருஷ்ணர், நிலைமை புரிந்து கொண்டு, ஸ்ரீமதி ராதாராணியை தராசின் ஒரு பக்கம் அமர வைத்து, மறுபக்கம் அவரின் எடைக்கு சமமான தங்கத்தை வைத்து, அந்த தங்கத்தை பிராமணருக்கு வழங்கினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த பிராமணர் தன்னுடைய புதல்வியின் திருமணத்தை மிகவும் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடத்தி முடித்தார்.
நீதி:
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
ஸ்ரீமதி ராதாராணி ஒரு பொக்கிஷமாவர். ஒருவர் மிகுந்த புண்ணியம் செய்திருந்தால் தான் ஸ்ரீமதி ராதாராணியின் திருவடிகளில் சரணடைய முடியும்.
"ராதாராணி, பகவான் கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியாவார். ஒருவர் பகவான் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினால், முதலில் ஸ்ரீமதி ராதாராணியை தஞ்சமடைய வேண்டும். அப்போது ராதாராணி மிகவும் மகிழ்ச்சியடைந்து, பகவான் கிருஷ்ணரிடம், "இங்கே பாருங்கள் ஒரு பக்த்தர் உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறார். அவர் என்னை விட சிறப்பாக சேவை செய்வார்", என்று பரிந்துரை செய்வார். நீங்கள் ஒரு பாவியாக இருந்தாலும் கூட, ஸ்ரீமதி ராதாரணியின் மூலமாக பகவான் கிருஷ்ணரை அடைய நினைத்தால், நீங்கள் நிச்சயம் ரட்சிக்கப்படுவீர்கள். ஆகையால் ஸ்ரீமதி ராதாராணியை வணங்குவதே நமது முதல் கடமை. ஒரு மலரை பகவான் கிருஷ்ணருக்கு நேரடியாக அர்பணிப்பதற்கு பதிலாக ஸ்ரீமதி ராதாராணியின் கரங்களில் தந்து, "ஸ்ரீமதி ராதாரணியே ! ஜெகன் மாதா! இந்த மலரை பாகவான் கிருஷ்ணரிடம் சேர்பிக்க உதவுங்கள் ", என்று கூறினீர்களென்றால், ஸ்ரீமதி ராதாராணி மிகவும் மகிழ்ந்து, "ஓ! பகவானுக்காக மலர்களை கொண்டு வந்துள்ளீர்கள்", என்று ஏற்றுக்கொள்வார். (பத்ரம் புஷ்பம் பலம் தோயம் - பகவத் கீதை 9 .26 ) . பகவான் கிருஷ்ணருக்கு நேரடியாக அர்ப்பணிக்க கூடாது. ராதாராணியின் மூலமாக அர்பணித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவர்".
புஷ்பாஞ்சலி செய்த பின்னர், "ஸ்ரீமதி ராதாராணி, என்னை பற்றி உங்கள் கிருஷ்ணரிடம் கூறுங்கள். கிருஷ்ணர் உங்களுடையவர். "ராதா - கிருஷ்ணர்". கிருஷ்ணர் என்பவர் தனித்திருப்பவர் அல்ல. கிருஷ்ணர் ராதாராணியின் சொத்து. ஆகையால் கிருஷ்ணரை ராதாராணியின் மூலமாக அணுக வேண்டும்".
( ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசம், லண்டன் செப்டம்பர் 5
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment