தேனுகாசுரன்


 தேனுகாசுரன்

🌼🌼🌼🌼🌼🌼🌼


கிருஷ்ணருக்கு ஆறு வயதானபோது, அவரிடம் மாடு மேய்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது, அதுவரை அவர் கன்றுக் குட்டிகளை மட்டுமே மேய்த்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பலராமரும் மாடு மேய்ப்பதற்காக வனத்திற்குச் சென்ற போது, அவர்களின் நண்பர்களான ஸ்ரீதாமர், ஸுபலர், ஸ்தோக கிருஷ்ணர் ஆகியோர் தால வனத்தில் இருக்கும் பழங்களை உண்ண விரும்பினர். தால வனத்தை அவர்கள் அடைந்தபோது, பலராமர் அங்கிருக்கும் மரங்களை உலுக்கினார். பழங்கள் கீழே விழுந்த சத்தத்தைக் கேட்ட கழுதை வடிவிலிருந்த தேனுகாசுரன் என்ற அசுரன் பூகம்பம் போன்ற ஒலியை எழுப்பி, கிருஷ்ண பலராமரை தாக்க முன்னோக்கி ஓடி வந்தான்.


பலராமர் தேனுகாசுரனின் கால்களை ஒரு கையால் பிடித்து சுழற்றி பனை மரத்தின் உச்சியில் வீசி எறிந்து வதம் செய்தார். இதைப் பார்த்த தேனுகாசுரனின் மற்ற கழுதை நண்பர்களும் கிருஷ்ண பலராமரை தாக்க முன் வந்தனர். அந்த கழுதைகளின் கால்களை பிடித்து கிருஷ்ணரும் பலராமரும் சுழற்றி சுழற்றி மரத்தின் உச்சியில் வீசி எறிந்து வதம் செய்தனர்.


தேனுகாசுரன் நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஆன்மீக அறியாமை மற்றும் பௌதிக புத்தி கூர்மையை குறிப்பதாக பக்திவினோத தாகூர் தெரிவிக்கிறார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more