ஜீவாத்மா


 ஜீவாத்மா 


🍁🍁🍁🍁🍁🍁🍁


பகவத் கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது ஒரு ஜீவாத்மா என்ற உணர்வு நிலைக்கு நம்மை கொண்டு வருவதே ஆகும். இந்நிலைக்கு நாம் வந்துவிட்டால், இன்னொரு முறை “நான் இந்த உடல்” என்ற உணர்வின் மட்டத்திற்கு தள்ளப்பட மாட்டோம். இதனால் இந்த உடல் அழியும் தருவாயில் நாம் பௌதிகக் களங்கங்களில் இருந்து விடுபட்டு, நம்முடைய ஆன்மீக வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டு விடும். இத்தகைய நிலையில் நாம் இந்த உடலை விட்டு நீங்கிய பிறகு நம்முடைய அடுத்த பிறவியில் அடையும் வாழ்க்கையானது முழுமையான, நித்தியமான ஆன்மீக வாழ்க்கையாகி விடுகிறது.


இந்த உடல் அழிக்கப்பட்டவுடன் உணர்வு அழிந்துவிடுவதில்லை. மாறாக இன்னொரு உடலுக்கு அது மாற்றப்படுகிறது. மீண்டும் இன்னொரு முறை அதற்கு வாழ்க்கையின் பௌதிக கொள்கை உணர்த்தப்படுகிறது. இதுவும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. நாம் இறக்கும் தருவாயில் நம்முடைய உணர்வு தூய்மையானதாக இருக்குமாயின், நாம் நிச்சயமாக கூறலாம், நம்முடைய அடுத்த வாழ்க்கையானது பௌதிகமாக அல்லாமல் ஆன்மீகமானதாகவே இருக்கும். நம்முடைய உணர்வு மரணத் தருவாயில் தூய்மையாக இல்லாத பட்சத்தில் நாம் இந்த உடலை விட்ட பிறகு மீண்டும் ஒரு ஜட உடலையே அடைய வேண்டி இருக்கும். இந்த முறையே இப்பொழுது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இயற்கையின் நியதி.


நாம் இப்பொழுது ஓர் அளவிற்குட்பட்ட உடலை உடையவராகவே இருக்கிறோம். நாம் காணும் இந்த உடலானது ஸ்தூல உடலாகும். இது ஒரு சட்டையும், கோட்டும் போன்றது; அதாவது கோட்டின் உள்ளே ஒரு சட்டை உள்ளது. அந்த சட்டையின் உள்ளே ஓர் உடல் உள்ளது. இதே போல் தான் தூய்மையான ஆத்மாவும் ஒரு சட்டையாலும், கோட்டாலும் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே மூட உபயோகப்படுத்தப்பட்டுள்ள உடைகள், மனம், அறிவு, பொய் அகங்காரம் என்ற மூன்றே ஆகும். பொய் அகங்காரம் என்பது, தான் ஒரு ஜடம் என்றும், தான் இந்த பௌதிக உலகத்தின் உற்பத்திப் பொருள் என்றும் தவறான அபிப்பிராயம் கொள்வதேயாகும். இந்த தவறான எண்ணம் நம்மை ஒரு எல்லைக்குள் அடைத்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, நான் இந்திய மண்ணில் பிறந்ததால், நான் ஒரு இந்தியன் என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனால் தூய ஆத்மா என்ற நிலையில் நான் இந்தியனும் அல்ல, அமெரிக்கனும் அல்ல; நான் ஒரு தூய ஆத்மா. அமெரிக்கன் அல்லது இந்தியன், ஜெர்மன் அல்லது வெள்ளைக்காரன்; பூனை அல்லது நாய், தேனீ அல்லது வௌவ்வால், ஆண் அல்லது பெண் போன்றவைகள் எல்லாம் ஒரு பட்டங்களாகும். ஆனால் ஆன்மீக உணர்வில் இத்தகைய அனைத்து பட்டங்களிலிருந்து நாம் விடுபடலாம். உன்னத ஆத்மாவாகிய கிருஷ்ணரிடம் எப்பொழுதும் தொடர்பு வைத்திருப்பதின் மூலம் நாம் இந்த விடுதலையைப் பெறலாம்.


கிருஷ்ணஇன்பத்தின் இருப்பிடம் / அத்தியாயம் 1 


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more