கடவுளை மறந்தால்
முழுமுதற் கடவுளை மறந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கும் சிறந்த கதை ஒன்று உள்ளது.
ஒரு சமயம், ஓர் எலிக்கு ஒரு பூனையினால் தொல்லை ஏற்பட்டது. ஆகவே, அந்த எலி இறைத்தன்மையை உணரச் செய்யும் ஆற்றல் படைத்த ஒரு சாதுவிடம் சென்று, “அன்புள்ள ஐயா, நான் மிகுந்த கவலையில் உள்ளேன்,” என்று கூறியது.
“என்ன கஷ்டம்?”
எலி கூறியது, “என்னை ஒரு பூனை எப்போதும் துரத்துவதால், எனக்கு மன அமைதி இல்லை.”
“என்ன வேண்டும் உனக்கு?”
“தயவுசெய்து என்னை பூனையாக மாற்றிவிடுங்கள்.”
“சரி. பூனையாக மாறுவாயாக!”
சாதுவின் வாக்கினால் அந்த எலி உடனடியாக பூனையாக மாறியது. ஆயினும், சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பூனை சாதுவிடம் வந்து கூறியது, “அன்புள்ள ஐயா, மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.”
“என்ன கவலை?”
“நாய்கள் என்னைத் துரத்துகின்றன.”
“என்ன வேண்டும் உனக்கு?”
“என்னை ஒரு நாயாக மாற்றிவிடுங்கள்.”
“சரி. நாயாக மாறுவாயாக!”
பூனை நாயாக மாறியது. சில நாள்களுக்குப் பிறகு அந்த நாய் மீண்டும் அவரிடம் வந்து கூறியது, “மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.”
“என்ன கவலை?”
“நரிகள் என்னைத் துரத்துகின்றன.”
“என்ன வேண்டும் உனக்கு?”
“என்னை நரியாக மாற்றுங்கள்.”
“சரி. நரியாக மாறுவாயாக!”
நரியாக மாறிய சில நாள்களில் மீண்டும் அது சாதுவை அணுகியது, “புலிகள் என்னைத் துரத்துகின்றன.”
“அப்படியெனில், உனக்கு என்ன வேண்டும்?”
“நான் புலியாக மாற விரும்புகிறேன்.”
“சரி, புலியாக மாறுவாயாக!”
அது புலியாக மாறியவுடன் சாதுவை முறைத்து பார்த்துக் கூறியது, “நான் உங்களை உண்ணப் போகிறேன்.”
“என்னை உண்ணப் போகிறாயா? நான் உனக்கு உதவி புரிந்தேன், நீ என்னையே உண்ண விரும்புகிறாயா?”
“ஆம், இப்போது உங்களை உண்ணப் போகிறேன்.”
உடனடியாக அந்த சாது அப்புலியை நோக்கி, “மீண்டும் எலியாக மாறு,” என்று சபித்தார். அந்தப் புலி எலியாக மாறியது.
நமது மனித நாகரிகம் இதுபோன்றுதான் உள்ளது. ஒருநாள் நான் உலக பஞ்சாங்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அடுத்த நூறு ஆண்டுகளில் மனிதர்கள் எலிகளைப் போல பூமிக்கடியில் வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக மனிதர்களைக் கொல்வதற்காக அணுகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு பயன்படுத்தப்பட்டால் மக்கள் பூமிக்கடியில் பதுங்கி எலிகளைப் போல வாழ வேண்டும். கதையில் வருவதைப் போல புலியிலிருந்து எலியாக மாறுவோம், அது நடக்கத்தான் போகிறது, அதுவே இயற்கையின் சட்டம்.
நாட்டின் சட்டங்களை மீறுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அதே போல முழுமுதற் கடவுளின் அதிகாரத்தை மீறுபவர்களும் தண்டிக்கப்படுவார்கள். நீங்கள் மீண்டும் எலியாக மாறுவீர்கள். அணுகுண்டு வெடித்தவுடன் உலகிலுள்ள எல்லா நாகரிகமும் முடிந்துவிடும். இந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கக்கூட நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இது கேட்பதற்கு மிகவும் கசப்பாக இருக்கலாம், ஆனால் இதுவே உண்மை.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment