பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம்
அத்தியாயம் -16
தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பதினைந்தாம் அத்தியாயத்தின் சுருக்கம்
ஜடவுலகத்தினை தலைகீழான
ஓர் அரச மரத்துடன் ஒப்பிட்டு
கிருஷ்ணர் பதினைந்தாம்
அத்தியாயத்தினைத் தொடக்கினார். அந்த
அரச மரத்தின்
ஆதியைக் காண முடியாது என்றும்,
பற்றின்மையைக் கொண்டு
அதனை வெட்டி
வீழ்த்த வேண்டும்
என்றும் அறிவுறுத்தினார்.
அவ்வாறு வீழ்த்துவதால்
அடையப்படும் கிருஷ்ணரின்
உயர்ந்த லோகம்,
சூரியனாலோ சந்திரனாலோ
நெருப்பினாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அங்கு வசிப்பதற்குப் பதிலாக
இந்த ஜடவுலக
வாழ்வில் துன்பப்படும்
கிருஷ்ணரின் நித்திய
அம்சங்களான ஜீவன்கள்,
ஓர் உடலை
விட்டு மற்ற
உடலை அடையும்போது,
முந்தைய உடலின்
உணர்வுகளைத் தாங்கிச் செல்கின்றன. அவர்களின்
உடல்களை கிருஷ்ணரே
பராமரிக்கின்றார், அவரே வேதங்களை
அறிந்தவராகவும் உள்ளார். எல்லா உயிர்வாழிகளுக்கும்
அப்பாற்பட்டவராகத் திகழும் கிருஷ்ணரை
அறிந்தவன் அனைத்தையும்
அறிந்தவனாகிறான். அவன் அவரது
தூய பக்தியில்
ஈடுபடுவான்.
15ஆம் அத்தியாயத்திற்கும் 16ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு
அத்தியாயம் பதினைந்தில் அரச மரத்தைப் பற்றி
விளக்கும்போது, அம்மரத்தின்
பல்வேறு கிளைகளுக்கு முக்குணங்கள் ஊக்கம்
கொடுப்பதாக கிருஷ்ணர்
கூறினார். அரச மரத்தின் மேல்
கிளைகள் மங்களகரமானவை, தெய்வீகமானவை என்றும், அதன்
கீழ் கிளைகள்
அசுரத் தன்மை
கொண்டவை என்றும்
விளக்கப்பட்டன. மேல்
கிளைகள், கீழ்
கிளைகள் ஆகிய
இரண்டையும் முக்குணங்களே
ஊக்கமளிக்கின்றன. ஒருவனை முக்தியை நோக்கி அழைத்துச்
செல்லும் தெய்வீக
குணங்களைப் பற்றி
கிருஷ்ணர் பதினாறாம்
அத்தியாயத்தின் ஆரம்பத்தில்
எடுத்துரைக்கின்றார். அதனைத் தொடர்ந்து
ஒருவனை நரகத்திற்கு
அழைத்துச் செல்லும்
அசுர இயல்புகளை விரிவாக விளக்குகின்றார்.
தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்
தெய்வீக இயல்புடைய
உன்னதமான மனிதரைச்
சார்ந்த குணங்கள்
இருபத்தி ஆறு.
இக்குணங்கள் அனைத்தையும் கிருஷ்ணர் முதலில்
பட்டியலிடுகிறார். அவையாவன: அச்சமின்மை,
தனது நிலையைத்
தூய்மைப்படுத்துதல், ஆன்மீக ஞானத்தை
விருத்தி செய்து
கொள்ளுதல், தானம்,
சுயக் கட்டுப்பாடு,
யாகம் செய்தல்,
வேதங்களைக் கற்றல்,
தவம், எளிமை,
அகிம்சை, வாய்மை,
கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை,
துறவு, சாந்தி,
குற்றம் காண்பதில்
விருப்பமின்மை, எல்லா
உயிர்களின் மீதும்
கருணை கொள்ளுதல்,
பேராசையிலிருந்து விடுபட்ட தன்மை, கண்ணியம், வெட்கம், மனவுறுதி,
வீரம், மன்னிக்கும் தன்மை, தைரியம்,
தூய்மை, பொறாமையின்மை,
மற்றும் மரியாதையை எதிர்பார்க்காமல்
இருத்தல். (ஒவ்வொரு குணம் குறித்த
விளக்கத்தையும் அறிய
ஸ்ரீல பிரபுபாதரின் பொருளுரையை அணுகவும்)
வேத சாஸ்திரங்களில்
கூறப்பட்டுள்ள முறையான சடங்குகளின்படி குழந்தைகளைப்
பெறுபவர்கள், தெய்வீக குணம் கொண்ட
மக்களை ஈன்றெடுக்க
முடியும். கிருஷ்ணர் எடுத்துரைத்த தெய்வீக
குணங்கள் அனைவருக்கும் அவசியமானவை என்றபோதிலும்,
வர்ணாஷ்ரம தர்மத்தின் அடிப்படையில்,
ஒவ்வொரு குணமும்
குறிப்பிட்ட சமூகத்திற்கு மிகவும் அவசியமாக
உள்ளது. பல்வேறு வர்ணம் மற்றும்
ஆஷ்ரமத்திற்கு ஏற்றாற்போல,
இவை விருத்தி செய்துகொள்ளப்பட
வேண்டும். ஜட சூழ்நிலைகள் துன்பமயமானவை என்றபோதிலும்,
இக்குணங்களை வளர்த்துக் கொள்வதால், ஒவ்வொருவரும்
படிப்படியாக ஆன்மீக
உணர்வின் உயர்தளத்தினை
அடையக்கூடும்.
இருபத்தி-ஆறு தெய்வீக குணங்களை
எடுத்துரைத்த பின்னர், பின்வரும் ஆறு அசுர குணங்களை
கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்: தற்பெருமை,
அகந்தை, வீண்
அபிமானம், கோபம், கொடூரம்,
மற்றும் அறியாமை. தெய்வீக குணங்கள் முக்தி
தரக்கூடியவை, அசுர குணங்களோ பந்தப்படுத்துபவை
என்று கூறிய
கிருஷ்ணர், எப்போதும் தெய்வீக
குணத்தில் நிலை
பெற்றுள்ள அர்ஜுனனுக்கு
ஊக்கம் தரும்
பொருட்டு, பாண்டுவின்
மைந்தனே, கவலைப்பட
வேண்டாம். நீ தெய்வீக குணங்களுடன்
பிறந்துள்ளாய்,” என்று கூறினார்.
இவ்வுலகில் படைக்கப்பட்ட
உயிர்வாழிகளில் சிலர்
தெய்வீக குணங்களுடனும்
சிலர் அசுர
குணங்களுடனும் பிறந்துள்ளனர்.
சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள
நியமங்களின்படி வாழ்க்கையை
நடத்துபவன் தெய்வீக
குணங்களுடன் உள்ளான்
என்றும், தனது
மனம்போன போக்கில்
இயங்குபவன் அசுரத்
தன்மை கொண்டவன்
என்றும் புரிந்துகொள்ளப்பட
வேண்டும். இந்த
இரு பிரிவினருமே
பிரஜாபதியிடமிருந்து தோன்றினர்; ஒரே வேற்றுமை என்னவெனில்,
ஒரு பிரிவினர்
வேத நெறிகளுக்குக்
கீழ்படிகின்றனர், மற்றவர் கீழ்படிவதில்லை.
அசுர இயல்புகளைப் பற்றிய
சிறு குறிப்பினை
முதலில் வழங்கிய கிருஷ்ணர்,
அர்ஜுனனின் தெய்வீகத்
தன்மையினை உறுதி
செய்யும் பொருட்டும்
போரிடுதல் என்பது
அசுரத் தன்மையல்ல
என்பதை அர்ஜுனன்
உணரும் பொருட்டும்,
அசுர இயல்புகளை
விரிவாக எடுத்துரைக்கின்றார்.
Comments
Post a Comment