ப்ரேமே ரேபரமஸாரா மஹா பாவ ஜானி
குஸமஹா பாவரூபா ராதா தாக்கூராணி
ஆனந்த குண ஸ்ரீராதிகாரா பஞ்சீக ப்ரதான
ஏகுணேர வாசி ஹயா க்ருஷ்ண பகவான்
பக்தியுடைய சாரம் மஹாபாவம் ( ஆன்மீகஆனந்தம் ) என்று அழைக்கப்படுகிறது . அவைகளை ஸ்ரீமதி ராதாராணி பிரதிபலிக்கிறாள். ஸ்ரீமதிராதாராணியை விட உயர்ந்த பக்தர் யாரும் கிடையாது. அளவற்ற வகையில் பக்தி குணங்கள் உடையவள். அவள் தன்னிடமுள்ள இருபத்தைந்து பிரதானமான பக்தி குணங்களால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தன்வசம் வைத்திருக்கிறாள். - சைதன்ய சரிதாமிருதம் (8.160)
1. மதுரா : மிகவும் இனிமை நிறைந்தவள்
2. நவ்யா : புத்துணர்வோடு இளமையாக இருத்தல்
3. சால அபங்க :கண்கள் ஓய்வற்று கிருஷ்ணரை நாடிக் கொண்டிருக்கும்.
4. உஜ்வல ஸ்மிதா : பிரகாசமான சிரிப்பை உதிர்ப்பவள்
5. சாது சௌபாக்ய ரேக ஆத்யா :உடலில் அழகும் மங்களமும் நிறைந்த ரேகைகள் கொண்டவள்.
6. கந்த அன் மடித்த மாதவ : தன் உடலில் உள்ள நறுமணத்தால் கிருஷ்ணரை கவருபவள்.
7. சங்கீத ப்ரஸார அபிக்யா : சிறந்த பாடகி
8. ரம்ய வாக் :வசீகரமான பேச்சுத்திறன் கொண்டவள்.
9. நார்மபண்டிதா : நகைச்சுவையாக பேசுவதில் சிறந்தவள்
10. வினிதா : பணிவும் அடக்கமும் கொண்டவள்
11. கருண பூர்ணா : முழு கருணை உள்ளம் கொண்டவள்
12. விதாப்தா : தந்திர சுபாவம் கொண்டவள்
13. பார்த்தவ அன்வீதா :தன் கடமைகளைச் செய்வதில் சாமார்த்தியம் கொண்டவள்.
14. லஜ்ஜ ஸூலோ : கூச்ச சுபாவம் கொண்டவள்
15. சூ மரியாதா : மரியாதை கொண்டவள்
16. தைர்ய : சலனமற்றவள்
17. காம்பீர்ய சாலினி : கம்பீர மனம் உடையவள்
18. சூவிலாச : விளையாட்டு சுபாவம் கொண்டவள்
19. மஹாபாவ : உயர்ந்த ஆன்மீக ஆனந்தத்தை உடையவள்
20. பரம உர்கஷ தர்ஷினி கோகுலப் ப்ரேமா : தலை சிறந்தவள்
21. ஜகத் ஸ்ரீ நியாஸா : அடக்கமான பக்தர்களில் மிகவும் புகழ்வாய்ந்தவள்
22. குரு ஸ்நேகா : பெரியவர்களிடம் பிரியம் கொண்டவள்
23. சகி ப்ரணமித வாஸா : கோபியர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டவள்
24. க்ருஷ்ணப்ரிய ஆவளிமுக்யா : கோபியர்களின் தலைவி
25. ஆஸ்ரவ கேசவா :கிருஷ்ணரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவள்.
இந்த தகவல்கள் உஜ்ஜ்வல-நீலமணி (ஸ்ரீ-ராதா,-ப்ரகரண 11-15) என்னும் நூலில் காணப்படுகின்றன.
( ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை - 23.87-91)
Comments
Post a Comment