கோலோக விருந்தாவனத்தில் ராதா குண்டத்தின் தோற்றம்

 




கோலோக விருந்தாவனத்தில்  ராதா குண்டத்தின் தோற்றம்


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


ராதா-குண்டம் மற்றும் சியாமா-குண்டம் எவ்வாறு ஆன்மீக உலகில் முதலில் தோன்றின என்பது பற்றி ஆதி-புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கோலோக விருந்தாவனத்தில்,  ஸ்ரீமதி ராதாராணியும் பகவான் கிருஷ்ணரும் ஒரு வனத்தில்  ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். கோபியர்கள் அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர்.  ராதாராணியின் இன்பத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்த கிருஷ்ணர் திடீரென்று தீவிர அன்பின் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். கிருஷ்ணரின் உணர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்ததால், அவர் ராதாராணியின் மனநிலையைப் பெறத் தொடங்கினார். அந்த மனநிலையில் , இறைவன் கண்ணீரை வடித்து, கிருஷ்ணரின் பெயரை மீண்டும் மீண்டும் அழைக்கத் தொடங்கினார்; பின்னர் விரக்தியால், தன்னைத் தேடி அருகிலுள்ள காட்டுக்குள் ஓடினார்.


கிருஷ்ணரை தன் சொந்த வடிவத்திலும் மனநிலையிலும் பார்த்து, அருகில் உள்ள காட்டில் மறைந்து சென்றதை பார்த்த ஸ்ரீமதி ராதாராணியும் தீவிர அன்பின் மனநிலையில் அதே வனத்திற்குள் நுழைந்தார். ராதாராணியுடைய உணர்வுகள் மிகவும் தீவிரமாக, அவர் கிருஷ்ணரின் மனநிலையையும் வடிவத்தையும் எடுத்தார். கண்ணீர் பெருக்கெடுத்து, மீண்டும் மீண்டும் ராதாவின் பெயரைக் கூறி அழ ஆரம்பித்தார்.


ராதாராணியின் திடீர்  தீவிரமான மனநிலை மாற்றத்தை அவதானித்த கோபியர்கள் அவரை பல வழிகளில் சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் பலனில்லை. கோபியர்களில் சிலர் காட்டிற்குள் நுழைந்து கிருஷ்ணரைக் கண்டுபிடிக்க முயன்றனர். சிறிது நேரம் தேடிய பிறகு, கோபியர்கள் கிருஷ்ணரைக் கண்டுபிடித்து, அவரை ஓரளவு சமாதானப்படுத்தி, ராதாராணியின் பரிதாப நிலையைத் தெரிவித்தனர். நிலைமையைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர், உடனடியாக ராதாராணியிடம் செல்ல விரும்பினார். ராதாராணியின் நவாக்ஷர மந்திரத்தை உச்சரித்தால், அவர் உடனடியாக வருவார் என்று வானத்திலிருந்து திடீரென்று ஒரு வான குரல் ஒலித்தது.


ராதாராணியின் வடிவத்திலும் மனநிலையிலும் இருந்த கிருஷ்ணர், பின்னர் நவாக்ஷர மந்திரத்தை உச்சரித்தார், ராதாராணி உடனடியாக அங்கு வந்து அவர் முன் நின்றார். பின்னர், கிருஷ்ணர் இனிய வார்த்தைகளில் அவரிடம் பேசத் தொடங்குவதை ராதாராணி தலை குனிந்து, வெட்கத்துடன் தரையை நோக்கிய கண்களுடன்,  கேட்டார். "என் அன்பான ராதா, நான் உனது நித்திய சேவகன், தயவு செய்து நீ நினைக்கும் விதத்தில் எனக்கு தண்டனை கொடு. என் அன்பான ராதா, நான் உன்னை பிரிந்து அழவைத்தேன், உன்னை வேதனைப்படுத்தினேன். நானும் அளவற்ற பிரிவினால் கதறி அழுதேன்.  நமது கண்ணீர் வெள்ளம் இரண்டு குண்டங்களை உருவாக்கியது.  உனது கண்ணீரால் உருவாக்கப்பட்ட குண்டம் ராதா குண்டம் என்றும், என் கண்ணீரால் உருவாக்கப்பட்ட குண்டம் சியாமகுண்டம் என்றும் அறியப்படும்.


கிருஷ்ணரிடமிருந்து இதை கேட்டு, ராதாராணி சமாதானம் அடைந்தார். அவர்கள் இருவரும் தங்கள் துன்பத்தை துறந்ததைக் கண்டு கோபியர்கள் மகிழ்ந்தனர். ராதாராணியும் கிருஷ்ணரும் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு குண்டங்களில் குளிக்கச் சென்றனர். ராதாராணி தன் கண்ணீரால் நிரம்பிய  ராதா-குண்டத்தில்  மூழ்கியபோது, அவர்  உடனடியாக தனது அசல் வடிவத்தை மீட்டெடுத்தார்.  இது அனைத்து கோபியர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.  பின்னர் கிருஷ்ணர் தன் கண்ணீரால் நிரம்பிய சியாமா-குண்டத்தில்  மூழ்கி உடனடியாக தனது அசல் வடிவத்தை திரும்பப் பெற்றார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more