அதோ திருடன்!!

 


உபாக்யானே உபதேசம்


அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி )


மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்


அதோ திருடன்!! 


ஒரு காலத்தில் ஒரு கிராமம் தொடர்ந்து திருட்டுகளால் பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் எச்சரிக்கும் போதெல்லாம், திருடன் ஓடிவிடுவான். மக்களால் ஒரு கூக்குரல் எழுப்பப்படும், அப்போது மக்கள் அனைவரும் ஒன்று சேருவர். ஆனால் திருடன் ஓடிவிடுவதால், ஒவ்வொரு முறையும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வர்.


இறுதியாக, கிராமத்தலைவர் திருட்டில் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனித்தனியாக அழைத்து நம்பிக்கையுடன் விசாரித்தார். விசாரணையின் மூலம், ஒரு குறிப்பிட்ட நபர் அந்த கூட்டத்திற்கு  வருவதையும், ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்தபோது திருடனைக் கண்டுபிடிக்க அந்த நபர் பதற்றமாகவும், ஆர்வமாகவும் இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார்.


இந்தச் சம்பவத்தால் கிராமத் தலைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அன்று நள்ளிரவில் இருந்து சந்தேகப்படும் அந்த குறிப்பிட்ட நபரை அவரது வீட்டில் கண்காணித்து அவரது நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு கிராம காவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், கிராம தலைவரே காவலரை கவனமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரது கடமைகளை தொடர்ந்து மேற்பார்வையிட்டார்.


ஒரு இரவு, சந்தேகத்திற்குரிய அந்த நபர் தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திருடனின் கருவியை தனது சால்வையின் கீழ் மறைத்து வைத்து, சுமார் 2 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே வருவதை காவலாளி பார்த்தார்.


காவலாளி அவரைப் பின்தொடர்ந்து மறைந்தவாறு சென்றார். சந்தேகத்திற்குரிய அந்த நபர் ஒரு கிராமவாசியின்  வீட்டின் சுவரை ஒரு திருடனின் கருவியின் உதவியுடன் உடைப்பதை கவனித்தார். சிறிது நேரத்தில், வீட்டு உரிமையாளர், “திருடன், திருடன்!!” என்று அலறத் தொடங்கினார், மேலும் சந்தேகத்திற்கிடமான அந்த நபர் திருடப்பட்ட பொருட்களுடன் வீட்டிற்கு வெளியே வருவதைக் காவலாளி கவனித்தார். அந்த நபர் அவசரமாக அருகிலுள்ள காட்டுக்குள் நுழைந்துவிட்டார்.


வீட்டு உரிமையாளர் உதவிக்காக அலறியதைத் தொடர்ந்து கிராம மக்கள் வழக்கம் போல் திரண்டபோது, சந்தேகமடைந்த நபர் காட்டின் எதிர்புறத்தில் இருந்து வெளியே வந்து, சம்பவத்தைப் பற்றி விசாரிக்கும் கிராம மக்களின் கூட்டத்தில் அப்பாவியாகச் சேர்ந்தான். அவன் திருடனைத் தேடுவது போல் நடித்துக் கொண்டு எல்லாத் திசைகளிலும் தேடுவது போல் நடித்தான். அருகில் நின்று கொண்டிருந்த கிராமக் காவலாளியைக் கண்டு, அவனைப் பிடித்து, "இதோ கொள்ளைக்காரன், இதோ கொள்ளைக்காரன்!" என்று கத்தினான்.


அவனது அலறலால் ஈர்க்கப்பட்ட மக்கள், அவர்களைச் சுற்றி கூடி, காவலாளியை கேலி செய்யத் தொடங்கினர். அவர்களில் சிலர் அவரை அடிக்கத் தயாரானார்கள்.அதிர்ஷ்டவசமாக, கிராமத் தலைவர் அந்த இடத்திலேயே தோன்றி அவர்களை சமாதானப்படுத்தினார். அவர் பாதுகாவலரை பக்கத்தில் அழைத்து சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையைக் கொடுக்கும்படி கூறினார். உண்மையான குற்றவாளியான மனிதனின் முக பாவனையை கவனிக்குமாறு வேறு சில கிராமவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.


அதன்பிறகு, காவலாளியின் வழிகாட்டுதலின்படி அவர் மற்றவர்களுடன் காட்டை நோக்கிச் சென்றார், அதே நேரத்தில் திருடன் பதற்றத்துடன் அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டான், “ நீங்கள் ஏன் திருடனுக்காக காட்டுக்குள் செல்கிறீர்கள்? இந்த இருண்ட இரவில், அந்த பாம்புகள் நிறைந்த காடு மிகவும் ஆபத்தானது. எந்தத் திருடனும் அந்த காட்டிற்குள் தன்னை மறைத்துக் கொள்ள முடியாது, நிச்சயமாக! " என்று கேட்டான்.


அவனது இடைவிடாத முணுமுணுப்பைப் பொருட்படுத்தாமல், அனைவரும் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த மனிதன் ஓடிப்போகும் யோசனையுடன் படிப்படியாக பின்வாங்கத் தொடங்கினான். அவன் மிகவும் பயந்திருப்பது அவன் முகத்தில் தெரிந்தது.

  இறுதியில், கிராமவாசியின் வீட்டிலிருந்து திருடன் எடுத்துச் சென்ற நகைப் பெட்டி, கொள்ளையனின் கருவியுடன் காட்டில் கண்டெடுக்கப்பட்டது.


அப்போது அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது, புகாரளித்தவன்  தானே கொள்ளையன்  என்று, அதனால் கூட்டம் காட்டை விட்டு ஓடி அவனை துரத்தத் தொடங்கியது. அவன் ஓடி வரும்போது, “திருடன் போகிறான். அங்கே திருடன் செல்கிறான்!"

    தந்திரமான திருடனும் ஓடும்போது கத்த ஆரம்பித்தான், "திருடன் செல்கிறான், அங்கே திருடன் செல்கிறான்", மற்றும் அப்பாவி வழிப்போக்கர்கள் அனைவரையும் சுட்டிக்காட்டி, அவன்  ஒரு குழப்பத்தை உருவாக்கி விட்டு தப்பினான்.


நீதி


மக்களிடையே இத்தகைய குறும்பு நாத்திகர்களுக்கு பஞ்சமில்லை. அவர்கள் தொடர்ந்து சமூகத்தின் உண்மையான பாதுகாவலர்களை  கேவலப்படுத்துகிறார்கள், மேலும் சாமானியர்களுக்கு உண்மையாகவும் தன்னலமின்றி கருணை காட்டும் பெரிய ஆத்மாக்களை துன்புறுத்துகிறார்கள். அந்த புனிதர்களை `திருடர்கள் 'என்று நிரூபிக்கும் ஒரு மோசமான முயற்சியால் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். 


எல்லா வேத இலக்கியங்களிலும், பகவத் கீதை, பாகவதம், உபநிடதங்கள் முதலானவற்றில், இந்த ஜடவுலகம் பரமாத்மாவுக்கே சொந்தம் என்றும், எல்லாவற்றுக்கும் அவரேஉரிமையாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவானின் மகிமையையும் புனிதப் பெயரையும் போதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல்,  பரமாத்மாவின் திருப்திக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்காமல், தனது புலனின்பத்திற்காக பகவானுடைய சொத்துக்களை பயந்தடுத்துபவன், ஒரு திருடனாவான்.


அத்தகைய திருடன் எப்பொழுதும் பரமாத்மாவின் திருநாமத்தைப் பிரச்சாரம் செய்து, ஒவ்வொருவரையும் மாயையான வாழ்க்கை நிலையிலிருந்து எழுப்புவதற்காக வீடு வீடாகச் செல்லும் ஒரு சாதுவை பார்த்து, "அவன் மதிப்பில்லாதவன், சும்மா இருப்பவன், திருடன்" என்று சுட்டிக்காட்ட முயல்கிறான். இவன் திருடனாக இருந்துகொண்டு, ஒரு சாதுவை திருடன் என்று சுட்டிக்காட்டுகிறான்.

  இந்த கலி யுகத்தில் நாம் காணும் சாதாரண நடைமுறை இது. புகழ்பெற்ற கவிஞர் துளசி தாஸ் நீண்ட காலத்திற்கு முன்பு இவ்வாறு எழுதினார்:


கோர்கோ சோட் சத்கோ பந்தே, பாத்திக்கோ லகாயே ஃபான்சி /

தன்யா கலிஜுக் தேரி தமாசா, துக் லாகே அஓர் ஹாசி //


"உண்மையான திருடன் விடுவிக்கப்படுகிறான், துறவி கட்டிவைக்கப்படுகிறார், வழிப்போக்கன் தூக்கிலிடப்படுகிறான் - கலியுகத்திற்கு எல்லாப் புகழும், இது பரிதாபத்தையும் சிரிப்பையும் உருவாக்கும் பெரிய நகைச்சுவை."


  மதம், புனித நூல்கள், கீதை, பாகவதம் மற்றும் தெய்வங்களை தங்கள் பொருளாதாரத் தொழிலாகக் கையாளும் சில நயவஞ்சக வர்த்தகர்கள், ஹரியின் புனிதப் பெயரை சுயநலமற்ற நோக்குடன் பிரச்சாரம் செய்யும் உண்மையான புனிதர்களின் பிரசங்கத்தையும் சட்டவிரோத பேராசையாக கருதுகின்றனர். சாதுக்களுக்கு கூட பணம் தேவைப்படும்போது பௌதிக நபர்களை மட்டும் கண்டிக்கக்கூடாது என்று அவர்கள் குறும்புத்தனமாக கூறுகின்றனர். உண்மையில், (மேலே கூறப்பட்டுள்ள கதையில் வருவதைப்போல), இது ஒரு வாட்ச்மேனை ஒரு திருடன் என்று முத்திரை குத்துவது போன்றது.


  பகவான் ஸ்ரீ ஹரியின் திருநாமத்தைப் பிரசங்கிப்பதற்காக முழு உலக நலனுக்காக சாதுக்கள்  சேகரிக்கும் பணம் உபயோகப்படுகிறது. ஆனால் ஒரு பௌதிகவாதியின் பணம் தொழில், குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்காகவோ அல்லது சில தவறான செயல்களில் ஈடுபடுவதற்காகவோ அல்லது தனிப்பட்ட புலன்களை திருப்தி படுத்துவற்காகவோ உபயோகப்படுகிறது.


உண்மையான சாதுக்கள், பணம் சேகரித்து புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றனர். இந்த பொருள் உலகின் அனைத்து நாத்திக மற்றும் பந்தப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களுக்கும் நித்திய நலனை உறுதி செய்வதற்காக, பூரண உரிமையாளர் மற்றும் லக்ஷ்மி தேவியின் இறைவனின் புனித நாமம் மற்றும் ஐசுவரியங்களைப் பிரசங்கிப்பதில் அந்த பணம் மிகவும் கவனமாக செலவிடப்படுகிறது.


உண்மையில், லக்ஷ்மியின் அதிபதியின் செல்வத்தை அபகரிக்க முயலும் நபர்கள், உண்மையான சாதுக்களை சுட்டிக்காட்டி,  “அதோ திருடன் போகிறான், திருடன் போகிறான்! ”, என்று பொய்யான சாயலையும், அழுகையும் உருவாக்கி சாதாரண மக்களை குழப்ப முயற்சி செய்கிறார்கள்.  -பொறாமை மனம் கொண்ட அவர்கள், தங்களுடைய நயவஞ்சக குணத்தை மறைக்க  "திருடன், திருடன்!" என்று தூய்மையான சாதுக்களை கூறுகின்றனர்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more