ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி
பாகம் 4
கேசவ காஷ்மீரியைத் தோற்கடித்தல்
நவத்வீபத்தின் பண்டிதர்கள் பலருடன் வாதம் செய்வதில் நிமாய் ஆனந்தம் காண்பார். இதனால் இவரைச் சந்திப்பதற்குக்கூட மற்றவர்கள் அச்சப்படும் நிலை இருந்தது. நிமாய் பண்டிதர்” என்று விரைவில் புகழ் பெற்றார்.
சில காலம் கழித்து, காஷ்மீரைச் சேர்ந்த கேசவ காஷ்மீரி என்ற அசாதாரணமான பண்டிதர் நவத்வீபத்தைக் காண வந்தார். அவர் ஒரு திக்விஜயி பண்டிதர்; அதாவது மற்றவர்கள் அனைவரையும் வாதத்தில் வெற்றி கண்டவர். அவரது வருகையைக் கேள்விப்பட்ட நவத்வீபத்தின் பண்டிதர்கள் அனைவரும் இளம் நிமாயை மட்டும் அவ்வூரில் விட்டுவிட்டு தப்பி ஓடினர்.
மாலைப் பொழுதொன்றில் தமது மாணவர்களுடன் கங்கைக் கரையில் உலாவிக் கொண்டிருந்தபோது, கேசவ காஷ்மீரியை நிமாய் சந்தித்தார். மரியாதை செலுத்திய நிமாய், தாய் கங்கையைப் புகழ்ந்து சில பாடல்களை இயற்றி, பாண்டித்துவத்தை மெய்ப்பிக்கும்படி வினவினார். அரை மணி நேரத்திற்குள் கேசவ காஷ்மீரி நூறு பாடல்களை உரைத்தார். ஏதேனும் ஒரு பாடலின் நிறைகுறைகளை ஆராயும்படி கேசவ காஷ்மீரியிடம் நிமாய் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அனைத்து பாடல்களும் குற்றமற்றவை” என்று கேசவ காஷ்மீரி வலியுறுத்தினார்.
அப்பாடல்களிலிருந்து ஒரு பாடலை நிமாய் மேற்கோள் காட்டி, தங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில், நானும் இப்பாடலைப் பற்றி சற்று கூற விரும்புகிறேன்,” என்று உரைத்தார். திக்விஜயி பண்டிதரோ, தமது பாடலில் கருத்துக் கூற இந்த இளைஞனுக்கு உரிமையில்லை என்று எண்ணி தயங்கினார். எனினும், கேசவ காஷ்மீரியினால் கண்டுபிடிக்கப்படாத சில சிறப்பம்சங்களை முதலில் சுட்டிக்காட்டிய நிமாய், பின்னர் அவரது பாடலில் இருந்த சில முக்கிய தவறுகளை எடுத்துக் கூறினார். பதில் பேச இயலாத பண்டிதர் தமது இருப்பிடத்திற்குத் திரும்பி சரஸ்வதியை வழிபட்டு பிரார்த்தித்தார்: இது நாள் வரை மற்றெல்லா புத்திமான்களையும் வெல்வதற்குத் தாங்கள் என்னை ஆசிர்வதித்திருந்தீர்கள். ஆனால் இன்று ஓர் இளம் சிறுவனின் வாயினால் என்னை அவமதித்துவிட்டீர்கள். தங்களுக்கு எதிராக நான் என்ன குற்றம் இழைத்தேன்?”
அன்றிரவு கேசவ காஷ்மீரியின் கனவில் தோன்றிய சரஸ்வதி, கேசவரே! உங்களைத் தோற்கடித்த அந்நபர், எனது வழிபாட்டிற்குரிய பரம புருஷ பகவானாவார். அவரிடம் சரணடையுங்கள்,” என்று அறிவுறுத்தினாள். மறுநாள் காலை கேசவ காஷ்மீரி தாழ்மையுடன் நிமாயை அணுகினார். உலகையே வெல்லக்கூடிய பண்டிதரின் தாழ்மையை நற்பாங்குடன் நிமாய் ஏற்றுக் கொண்டார். நிமாயின் நற்பெயர் தற்போது நவத்வீபத்தில் எதிர்க்க முடியாததாயிற்று.
நாளை . .
சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமணம்
தொடரும் . . .
( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment