வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி
ஸ்ரீரங்கத்தை அடைதல்
பின்னர், அஹோபிலம், திருப்பதி, ஸ்ரீசைலம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி என பல்வேறு இடங்களுக்கு மஹாபிரபு தனது யாத்திரையைத் தொடர்ந்தார். விஷ்ணு கோயில்களை மட்டுமின்றி தேவர்களின் கோயில்களையும் தரிசித்தார். தேவர்களை சுதந்திரமான கடவுள்களாகப் பார்க்காமல், முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் தலைசிறந்த பக்தர்களாகக் கண்டார். அவர் பல்வேறு புண்ணிய நதிகளிலும் நீராடினார். மேலும், கிருஷ்ண உணர்வை கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தார்; ஒவ்வோர் இரவும் ஒரு கோயிலில் தங்கியிருந்து அங்கிருந்த பண்டிதர்களுக்கு வைஷ்ணவ தத்துவத்தை அளிப்பார்; பொதுமக்களை ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடும்படித் தூண்டுவார்.
பகவான் சைதன்யர் அப்பயணத்தில் ஸ்ரீரங்கத்தை அடைந்தபோது சாதுர்மாஸ்யம் ஆரம்பமாயிற்று. அம்மாதங்கள் முழுவதும் தனது வீட்டில் தங்குமாறு உள்ளூர் பிராமணரான வேங்கடபட்டர் விடுத்த அழைப்பை ஏற்று, கௌராங்கர் அங்குத் தங்கினார். அவர் தங்களுடன் இருப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய ஸ்ரீ ரங்கநாதரின் பக்தர்கள், கோயில் விக்ரஹத்தின் முன்பு அவர் பரவசத்தில் ஆடிப் பாடுவதைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிராமணர்கள் அவரை மதிய உணவிற்கு அழைப்பர்.
வேங்கடபட்டருடன் ஒரு விவாதம்
ஒருமுறை வேங்கடபட்டரிடம் மஹாபிரபு வேடிக்கையாகக் கூறினார்: உமது வழிபாட்டிற்குரிய லக்ஷ்மி எப்பொழுதுமே நாராயணரின் மார்பில் இருக்கின்றாள். ஆயினும், அவள் பசுக்களை மேய்ப்பதில் ஈடுபட்டுள்ள எனது பெருமான் ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைவதற்கு ஏன் விரும்பினாள்? அந்த இலக்கை அடைவதற்காக அவள் நீண்ட விரதங்களையும் எண்ணிலடங்காத தவங்களையும் ஏன் மேற்கொண்டாள்?”
வேங்கடபட்டர் பதிலளித்தார், ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ நாராயணரும் ஒருவரே; எனினும், கிருஷ்ணரின் லீலைகள் அவற்றின் விளையாட்டுத் தன்மையினால் மிகவும் மகிழ்வூட்டக்கூடியவை. கிருஷ்ணர், நாராயணர் இருவரும் ஒரே நபர் என்பதால், கிருஷ்ணரின் மீதான லக்ஷ்மியின் விருப்பத்தில் எந்தப் பிழையும் இல்லை.”
ஆம்; இருப்பினும், அவளால் ராஸ நடனத்தினுள் பங்குகொள்ள முடியவில்லை. அஃது ஏன் என்று தங்களால் கூற முடியுமா?” என்று மஹாபிரபு கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவத்தின் மர்மத்தினுள் என்னால் நுழைய முடியாது, சாதாரண உயிர்வாழியான நான் எவ்வாறு முழுமுதற் கடவுளின் செயல்களைப் புரிந்துகொள்ள முடியும்? அவை இலட்சக்கணக்கான சமுத்திரங்களைவிட ஆழமானவை,” என்று வேங்கடபட்டர் விடையளித்தார்.
பகவான் சைதன்யர் பின்வருமாறு விளக்கமளித்தார்: முழுமுதற் கடவுளின் மீதான பயபக்தியுடன் கூடிய வழிபாட்டின் காரணத்தினால், ராஸ லீலையினுள் லக்ஷ்மி இணைய முடியவில்லை. வைகுண்டத்தில் பகவானின் மீது மதிப்பும் மரியாதையும் மேலோங்கியுள்ளது, ஆனால் விருந்தாவனமோ கிருஷ்ணரின் மீது எளிமையாகவும் இயற்கையாகவும் அன்பு செலுத்துவதற்குரிய இடமாகும். பழங்கள், பூக்கள், பசுக்கள், மற்றும் யமுனை நதியினால் விருந்தாவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலை மிகவும் நெருக்கமானதாக உள்ளது. லக்ஷ்மியால் தனது வைகுண்ட மனப்பான்மையைக் கைவிட முடியவில்லை; மேலும், வைகுண்ட ரூபத்தைக் கைவிட்டு இடையர் பெண்களின் ரூபத்தை மேற்கொண்டு விருந்தாவனவாசிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதற்கும் அவள் தயாராக இல்லை. கிருஷ்ணரின் ராஸ லீலையினுள் நுழைவதற்கு கோபியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதே பக்குவமான வழிமுறை.
இவ்வாறாக நகைச்சுவை கலந்த முறையில், கிருஷ்ணரை வழிபடுவதன் உயர்தன்மையை, நெருக்கமான உறவின் மனோபாவங்கள் முதலியவற்றை பகவான் சைதன்யர் எடுத்துரைத்தார். எனினும், தவறாக எண்ணாதீர். நாம் வெறும் வேடிக்கையாகவே பேசினோம். நான் தங்களை எவ்விதத்திலும் குறை கூறவில்லை,” என்று சமாதானமும் செய்தார்.
சீதையை இராவணன் கடத்தினானா?
மதுரைக்கு அருகில் பயணம் செய்தபோது, ஸ்ரீ இராமரிடம் சரணடைந்திருந்த பக்தர் ஒருவரின் வீட்டிற்கு மஹாபிரபு வந்தார். அன்னை சீதையை இராவணன் கடத்திச் சென்றுவிட்டான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதை நினைத்து அவர் எப்பொழுதும் வருத்தத்துடன் இருந்தார். அப்போது, பகவான் சைதன்யர், உண்மையில் இராவணனால் சீதையைக் கடத்தியிருக்க இயலாது,” என்று கூறி அவரைச் சற்று சமாதானப்படுத்தினார்.
சில நாள்கள் கழித்து, மஹாபிரபு இராமேஸ்வரத்திற்குச் சென்றபோது அங்கிருந்த ஓர் ஆஸ்ரமத்திலிருந்து கூர்ம புராணத்தின் பழங்கால கையெழுத்துப் பிரதி ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், இராவணன் உண்மையான சீதையைக் கொண்டு செல்லவில்லை என்றும், அவளது மாயத் தோற்றத்தையே கொண்டு சென்றான் என்றும், அத்தருணத்தில் சீதையின் உண்மையான உருவம் அக்னி தேவரால் பாதுகாக்கப்பட்டது என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக கூர்ம புராணத்தின் சம்பந்தப்பட்ட பக்கத்தை மதுரையில் இருந்த பக்தரிடம் பகவான் சைதன்யர் கொண்டு வந்தார். அதனைப் படித்து, அப்பக்தர் துயரத்திலிருந்து உடனடியாக விடுபட்டார், சந்நியாசியைப் போன்று தோற்றமளிக்கும்போதிலும், உண்மையில் தாங்கள் எனக்குப் பிரியமான ஸ்ரீ இராமரே,” என்று உறுதியுடன் கூறினார்.
படிப்படியாக, தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையை அடைந்த மஹாபிரபு, திருவனந்தபுரம், உடுப்பி, சிருங்கேரி போன்ற புனித ஸ்தலங்களுக்கு விஜயம் செய்தார்.
நாளை . .
புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்
தொடரும் . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment