மஹாபிரபுவின் தீக்ஷை


 


ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்

மஹாபிரபுவின் தீக்ஷை


மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

அந்த திருநாமங்களை உச்சரித்து பரவசமடைந்த நிமாய், விரைவில் ஒரு வினாவுடன் ஈஸ்வர புரியிடம் திரும்பி வந்தார்: பிரபுவே! தாங்கள் எத்தகைய மந்திரத்தை எனக்கு அளித்தீர்? இஃது என்னைப் பித்தனாக்கி விட்டது. ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கும்போது, நான் சில சமயங்களில் ஆடுகிறேன், சில சமயங்களில் அழுகிறேன், சில சமயங்களில் தரையில் விழுகிறேன்.” மகிழ்ச்சியில் புன்னகைத்த ஈஸ்வர புரி பதிலளித்தார், அன்புள்ள சீடனே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தினால் வாழ்வின் பக்குவநிலையை நீங்கள் அடைந்துள்ளது நன்று. இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்குக் கிருஷ்ணரின் மீதான பற்றுதல் நிச்சயம் அதிகரிக்கும்ஶீஇதுவே இந்த மஹா மந்திரத்தின் தன்மை. தொடர்ந்து உச்சரியுங்கள்! மற்றவர்களையும் உச்சரிக்கத் தூண்டுங்கள்!”

நிமாயிடம் எழுந்த மாற்றம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அதன் பின்னர், நிமாய் தமது பாண்டித்துவத்தின் பெருமையை விட்டொழித்து கிருஷ்ண பிரேமையில் முழுமையாக மயங்கினார். நவத்வீபத்திற்குத் திரும்பும் வழி முழுவதும் ஹரே கிருஷ்ண என்று பரவசத்துடன் பாடிக் கொண்டிருந்தார். வேறுபட்ட நபராக வீட்டை அடைந்த நிமாய், தனது இதய தெய்வமான கிருஷ்ணரின் பிரிவினால் சில சமயங்களில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்; வேறு சில சமயங்களில் கிருஷ்ணரின் நாமங்களைப் பாடிக் கொண்டோ, அவரது வசீகரம், சிறப்பான குணங்கள், மற்றும் லீலைகளைப் பற்றி உயிரோட்டத்துடன் பேசிக் கொண்டோ இருப்பார்.

நவத்வீபத்தின் வைஷ்ணவர்களுடன் கிருஷ்ணரைப் பற்றி உரையாடுவதில் பகல் பொழுதையும், அவர்களுடன் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வதில் இரவுப் பொழுதையும் நிமாய் கழித்தார். தனது பக்தர்களைக் கவனிப்பதிலுள்ள இன்பத்தை அனுபவிப்பதற்காகவும் பொதுமக்களுக்கு உதாரணத்தை வகுப்பதற்காகவும், கௌராங்கர், வைஷ்ணவர்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார். அவ்வைஷ்ணவர்கள் கங்கையில் குளிப்பதற்குச் செல்லும்போதும் வழிபாட்டிற்காகச் செல்லும்போதும், அவர்களுடைய துணிகள், பூஜைப் பொருட்கள், சந்தனம், மற்றும் பூக்கூடைகளை நிமாய் எடுத்து வருவார்.

கௌராங்கர் கிருஷ்ண பிரேமையின் மயக்கத்தில் மேன்மேலும் மூழ்க ஆரம்பித்தார். மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பித்தனைப் போன்று பாடுவார், ஆடுவார், சிரிப்பார், அழுவார்.

நாளை . .
ஸங்கீர்த்தன இயக்கத்தின் தொடக்கம்
தொடரும் . . .

( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more