ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்
புரிக்குத் திரும்புதல்
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமைதியுடனும் திகழ்ந்தது.
அதன் பின்னர், மஹாபிரபுவின் ஆன்மீக சகோதரரான கோவிந்தர் தமது குருவான ஈஸ்வர புரியின் அறிவுரைப்படி மஹாபிரபுவின் நேரடி கைங்கரியத்தில் ஈடுபடுவதற்காக புரிக்கு வந்து சேர்ந்தார். குருவின் கட்டளை என்பதால், மஹாபிரபுவும் அவரை தமது அந்தரங்க சேவகராக ஏற்றார்.
நவத்வீபத்தைச் சார்ந்த புருஷோத்தம ஆச்சாரியரும் அங்கே ஸ்வரூபர் என்ற பெயருடன் வர, மஹாபிரபு அவரை ஸ்வரூப தாமோதரர்” என்று அழைத்து தம்முடைய அந்தரங்க தோழராக இணைத்துக் கொண்டார். ஸ்வரூப தாமோதரர் மிகவும் கற்றறிந்த பண்டிதரும் மஹாபிரபுவின் பக்தர்களில் தலைசிறந்த அதிகாரமுடையவரும் ஆவார். மற்ற பக்தர்கள் சில சமயங்களில் தவறான தத்துவக் கருத்துகளை எடுத்துரைத்தால்கூட, ஸ்வரூப தாமோதரர் ஒருபோதும் குழப்பமடையாமல் தவறுகளை சரி செய்வார். மேலும், அவர் கௌராங்கரின் உணர்ச்சிகளை உள்ளூர உணர்ந்து, அவரது பக்தி பாவத்தை தூண்டும்படியான இரகசியமான பக்திப் பாடல்களை இனிமையாகப் பாடுவார்; அந்த அளவிற்கு அவர் பகவானிடம் நெருக்கமாக இருந்தார்.
பிரதாபருத்ரரின் ஏக்கம்
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
ஒரிசா மன்னரான பிரதாபருத்ரர், பகவான் சைதன்யரின் வியக்கத்தக்க செயல்களையும் ஆழ்ந்த பக்தியையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைக் காண பேராவல் கொண்டார். ஆனால் மன்னருடன் உறவுகொள்வது சந்நியாசிக்கு உகந்ததல்ல என்று கருதிய சைதன்ய மஹாபிரபு, அவரைக் காண மறுத்து, பௌதிக வாழ்வைக் கடந்து, பகவானின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபடுவதில் தீவிர விருப்பம் கொண்டுள்ள ஒருவனுக்கு, புலனுகர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பௌதிகவாதியைக் காண்பதும் அதே போன்ற விருப்பம் கொண்ட பெண்ணைக் காண்பதும் விஷத்தை விரும்பி அருந்துவதைக் காட்டிலும் இழிவானதாகும்,” என்று பிரகடனம் செய்தார்.
பெருத்த ஏமாற்றமடைந்த மன்னர், ஸார்வபௌம பட்டாசாரியரையும் இராமானந்த ராயரையும் தமக்காக மஹாபிரபுவிடம் பரிந்துரைக்கும்படி மீண்டும்மீண்டும் வேண்டினார். ஆனால், முடியாது” என்பதில் பகவான் பிடிவாதமாக இருந்தார், புரியை விட்டே சென்று விடுவேன் என்று அச்சுறுத்தவும் செய்தார். ஸார்வபௌமர் இதனை பிரதாபருத்ரரிடம் தெரிவித்தபோது அவரது இதயம் நொறுங்கியது, பெரிதும் வருந்தினார், புலம்பினார். இருப்பினும், என்றாவது ஒருநாள் மஹாபிரபுவின் கருணையைப் பெறுவதில் மன்னர் நம்பிக்கையுடன் இருந்தார்.
நவத்வீபவாசிகளின் வருகை
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
பகவான் ஜகந்நாதரை அவரது கோயிலிலிருந்து குண்டிசா எனப்படும் மற்றொரு கோயிலுக்கு பெரிய ரதத்தினால் இழுத்துச் செல்லப்படக்கூடிய பிரபலமான திருவிழா, ரத யாத்திரை என்று அறியப்படுகின்றது. இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தொன்றுதொட்டு பல்வேறு யாத்திரிகர்கள் வங்காளத்திலிருந்து புரிக்கு வருவர். அப்பழக்கத்தைப் பின்பற்றி, நவத்வீபத்தில் வாழ்ந்த கௌராங்கரின் கிருஹஸ்த பக்தர்களில் பெரும்பாலானோர் அவரைக் காண்பதற்காக வருடந்தோறும் ரத யாத்திரையின்போது புரிக்கு வரத் தொடங்கினர், மழைக் காலத்தின் நான்கு மாதங்கள் முழுவதும் அங்கேயே இருப்பர்.
முதல் வருடம் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களைக் கொண்ட குழு புரியை வந்தடைந்தது. பெரிய அருவவாதியாக இருந்த ஸார்வபௌம பட்டாசாரியர் தங்களின் மத்தியில் ஆடிப் பாடுவதைக் கண்டு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுற்றனர்.
குறுகிய காலத்தில், ஹரிதாஸ தாகூர் வங்காளத்திலிருந்து வந்தார். புகழ்பெற்ற பக்தராக இருந்தபோதிலும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால், ஜகந்நாதரின் கோயிலுக்குள் நுழைவதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், மஹாபிரபு அவருக்காக ஒரு பிரத்யேகமான இடத்தை ஏற்பாடு செய்தார், தினமும் அவருக்கு மஹா பிரசாதம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார், தாமே நேரடியாக அவரது இடத்திற்கே சென்று தினமும் அவருக்கு தரிசனமளித்தார். இதன்மூலம், ஒரு பக்தர் பகவானிடம் முழுமையாக சரணடைந்தால், பகவானைக் காண அவருக்குத் தடை விதிக்கப்பட்டாலும், அவரைக் காண பகவானே வருவார் என்பது மெய்ப்பிக்கப்பட்டது.
நாளை . .
குண்டிசா கோயிலைத் தூய்மை செய்தல்
தொடரும் . . .
( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment