முழுமுதற் கடவுளாகிய
ஸ்ரீ கிருஷ்ணர்
மனித அல்லது
மிருக உருவங்களை
சில சமயங்களில்
ஏற்கிறார். ஆனால்
அவர்களின் இயல்புகளை
அவர் ஒருபோதும்
ஏற்பதேயில்லை. தவத்தினாலும்,
துறவினாலும் மனிதன்
கடவுளாகலாம் என்ற
தத்துவம் குறிப்பாக
இந்தியாவில் இன்று
அதிகரித்துள்ளது. பகவான்
ஸ்ரீ ராமர்,
பகவான் ஸ்ரீ
கிருஷ்ணர் மற்றும்
பகவான் ஸ்ரீ
சைதன்ய மஹாபிரபு
ஆகியோர் பகவான்களே
என்று வேத
நூல்களில் கூறப்பட்டுள்ளதை
முனிவர்களும், ரிஷிகளும்
அறிந்துள்ளனர். இதனால்
யோக்கியமற்ற பல
மனிதர்களும் தங்களது
சொந்த அவதாரங்களை
உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு கடவுளின்
ஓர் அவதாரத்தை
உண்டுபண்ணும் இம்முறை,
குறிப்பாக வங்காளத்தில்
சாதாரண தொழிலாகியிருக்கிறது.
பிரபலமான எந்தவொரு
மனிதரும், யோக
சக்திகளால் சில
மாயாஜால வித்தைகளை
செய்து காட்டும்
போது, மக்கள்
அவரை பரம
புருஷரின் ஓர்
அவதாரமாக எண்ணுகின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணர்
அவ்வகையைச் சேர்ந்த
ஓர் அவதாரமல்ல.
அவர் உண்மையான
பரம புருஷராக
இருந்தார். அவர்
தமது தாயார்
முன் நான்கு
கைகள் கொண்ட
விஷ்ணுவாகத் தோன்றினார்.
பின்னர், தாயாரின்
வேண்டுகோளுக்கு இணங்கி
ஒரு மனிதக்
குழந்தையாக மாறினார்.
அதன் பிறகு
அவர் உடனே
தமது தாயை
துறந்து, கோகுலத்திலுள்ள
மற்றொரு பக்தரை
தேடிச் சென்றார்.
அங்கு நந்த
மகாராஜரும், யசோதா
மாதாவும் அவரை
மகனாக ஏற்றுக்கொண்டனர்.
அதைப் போலவே,
பகவான் ஸ்ரீ
கிருஷ்ணருக்குச் சமமானவரான
ஸ்ரீ பலதேவரும்,
ஸ்ரீ வசுதேவரின்
மற்றொரு மனைவிக்குப்
பிறந்த ஒரு
மனிதக் குழந்தையாகவே
கருதப்பட்டார். தமது
பிறவி மற்றும்
செயல்கள் ஆகியவையெல்லாம்
தெய்வீகமானவை என்றும்,
அவற்றின் தெய்வீகத்
தன்மையை அறியும்
பேரதிர்ஷ்டம் உள்ளவர்
உடனே முக்தி
பெற்று பகவானின்
இராஜ்ஜியத்திற்கு திரும்பிச்
செல்ல தகுதியுடையவர்
ஆகின்றார் என்றும்
பகவத் கீதையில்
பகவான் கூறியுள்ளார்.
எனவே, பகவான்
ஸ்ரீ கிருஷ்ணரின்
தெய்வீகத் தன்மை
கொண்ட பிறவி
மற்றும் செயல்கள்
ஆகியவற்றின் அறிவு
ஒன்று மட்டுமே
முக்தி அடையப்
போதுமானதாகும். பாகவதத்தின்
முதல் ஒன்பது
காண்டங்களில் பகவானின்
தெய்வீகத் தன்மை
விளக்கப்பட்டுள்ளது. பத்தாவது
காண்டத்தில் அவரது
அந்தரங்க லீலைகள்
விளக்கப்பட்டுள்ளன. இந்நூலை
ஒருவர் தொடர்ந்து
படிக்கும்போது இவையெல்லாம்
தானாக புலப்படும்.
பகவான் தமது
தாயாரின் மடியிலிருந்தே
தமது தெய்வீகத்தன்மையை
காட்டியிருக்கிறார் என்பதை
இங்கு குறிப்பிடுவது
முக்கியமாகும். அவரது
செயல்களெல்லாம் அமானுஷ்யமானவை
ஆகும் (ஏழு
வயதில் அவர்
கோவர்தன மலையைத்
தூக்கினார்). அவர்
பரம புருஷ
பகவான்தான் என்பதை
இச்செயல்களெல்லாம் நிரூபிக்கின்றன.
இருப்பினும், அவரது
மாயத் திரையின்
காரணமாக, அவரை
ஒரு சாதாரண
மனிதக் குழந்தையாகவே
அவரது தாயும்,
தந்தையும், மற்ற
உறவினர்களும் எப்பொழுதும்
எண்ணினர். சில
அற்புதமான செயல்களை
அவர் செய்து
காட்டும்பொழுதெல்லாம், தாயும்,
தந்தையும், மற்ற
உறவினர்களும் எப்பொழுதும்
எண்ணினர். சில
அற்புதமான செயல்களை
அவர் செய்து
காட்டும்பொழுதெல்லாம், தாயும்,
தந்தையும் அவற்றை
வேறொரு முறையில்
புரிந்துகொண்டனர். மேலும்,
தங்களது மகனிடமிருந்த
உறுதியான பெற்றோர்
பாசத்தில் அவர்கள்
திருப்தி கொண்டவர்களாக
இருந்தனர். இவ்வாறாக,
அவர் ஒரு
மனிதரைப் போல்
காணப்பட்டபோதிலும், உண்மையில்
அவர்தான் சர்வ
சக்தி படைத்த
பரம புருஷ
பகவான் என்று
நைமிஷாரண்ய முனிவர்கள்
விவரிக்கின்றனர்.
ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.1.20 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment