பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்.
பாகவத-தர்மத்தில் எந்த முரண்பாடும் இல்லை.
“உன் மதம்”, “என் மதம்” என்ற வாசனைகூட பாகவத-தர்மத்தில் இல்லை. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று பகவத்கீதை கூறுவதுபோல், பாகவத தர்மம் என்பது பரமபுருஷராகிய
பகவானால் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றுவதாகும். கடவுள் ஒருவரே. அவர் அனைவருக்கும்
உரியவர். ஆகவே அனைவரும் கடவுளிடம் சரணடைய வேண்டும். அதுவே சமயம் என்பதன் உண்மையான கருத்தாகும்.
எதைக் கடவுள் கட்டளையிடுகிறாரோ அதுவே தர்மம் எனப்படும் (தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்).
பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும்
பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். ஆனுகூல்யேன
க்ருஷ்ணானுசீலனம்: எதையெல்லாம் கிருஷ்ணர் கூறுகிறாரோ, எதையெல்லாம் கடவுள் கூறுகிறாரோ-அதையெல்லாம்
நேரடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவே தர்மம் (மதம்) எனப்படும்.
ஶ்ரீமத் பாகவதம் 6.16.41 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment