பதம்
1
ஸ்ரீ-பகவான் உவாச
ஊத்வா-மூலம் அத:ஷாகம்
அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி
யஸ் தம் வேத ஸ வேத-வித்
மொழிபெயர்ப்பு
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: மேல்நோக்கிய வேர்களையும் கீழ்நோக்கிய கிளைகளையும், வேத பதங்களை இலைகளாகவும் கொண்ட ஓர் ஆலமரம் உள்ளது என்று கூறப்படுகின்றது. இம்மரத்தை அறிந்தவன் வேதங்களை அறிந்தவன்.
பதம்
2
அதஷ் சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ் தஸ்ய ஷாகா
குண-ப்ரவ்ருத்தா விஷய-ப்ரவாலா:
அதஷ்ச மூலான்-யனுஸந்ததானி
கர்மானுபந்தீனி மனுஷ்ய-லோகே
மொழிபெயர்ப்பு
இம்மரத்தின் கிளைகள், ஜட இயற்கையின் முக்குணங்களால் வளப்படுத்தப்பட்டு, மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் விரிகின்றன. உபகிளைகள் புலனின்ப விஷயங்களாகும். இம்மரத்திலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள், பலன் நோக்குச் செயல்களால் பந்தப்படுத்தப்பட்டுள்ளன.
பதம்
3-4
ந ரூபம் அஸ்யேஹ ததோபலப்யதே
நான்தோ ந சாதிர் ந ச ஸம்ப்ரதிஷ்டா
அஷ்வத்தம் ஏனம் ஸு-விருட மூலம்
அஸங்க-ஷஸ்த்ரேண த்ருடேன சித்த்வா
தத: பதம் பரிமார்கிதவ்யம்
யஸ்மின் கதா ந நிவர்தந்தி பூய:
தம் ஏவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ
மொழிபெயர்ப்பு
இம்மரத்தின் உண்மை உருவம் இவ்வுலகில் காணப்படக் கூடியதல்ல. இஃது எங்கே முடிகின்றது, எங்கே தொடங்குகின்றது, அல்லது இதன் அஸ்திவாரம் எங்கே இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்கொள்ள முடியாது. ஆனால் பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை பற்றின்மை எனும் ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டிச் சாய்க்க வேண்டும். அதன் பின்னர், எங்கே செல்வதால் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தை நாடி, அங்கே, யாரிடமிருந்து எல்லாம் தொடங்குகின்றதோ, யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகின்றதோ, அந்த பரம புருஷ பகவானிடம் சரணடைய வேண்டும்.
பதம்
5
நிர்மான-மோஹா ஜித-ஸங்க-தோஷா
அத்பாத்ம-நித்யா வினிவ்ருத்த-காமா:
த்வந்த்வைர் விமுக்தா: ஸுக-து:க-ஸம்ஞைர்
கச்சந்த்-யமூடா: பதம் அவ்யயம் தத்
மொழிபெயர்ப்பு
பொய் கெளரவம், மயக்கம் மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்தைப் புரிந்து கொண்டு, பெளதிக காமத்தை நிறுத்திவிட்டு, இன்ப துன்பம் என்னும் இருமையை ஒழித்து, மயக்கமுறாமல் இருப்பவர்கள், பரம புருஷரிடம் சரணடைவது எவ்வாறு என்பதை அறிந்து, அந்த நித்திய ராஜ்ஜியத்தை அடைகின்றனர்.
பதம்
6
ந தத் பாஸயதே ஸூர்யோ
ந ஷஷாங்கொ ந பாவக:
யத் கத்வா ந நிவர்தந்தே
தத் தாம பரமம் மம
மொழிபெயர்ப்பு
எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.
பதம்
7
மமைவாம்ஷோ ஜீவ-லோகே
ஜீவ-பூத: ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி
ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி
மொழிபெயர்ப்பு
இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.
பதம்
8
ஷரீரம் யத் அவாப்னோதி
யச் சாப்-யுத்க்ராமதீஷ்வர:
க்ருஹீத்வைதானி ஸம்யாதி
வாயுர் கந்தான் இவாஷயாத்
மொழிபெயர்ப்பு
காற்று நறுமணத்தைத் தாங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் இருக்கும் உயிர்வாழி, ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு வாழ்வின் பல்வேறு உணர்வுகளைச் சுமந்து செல்கிறான். இவ்வாறு, ஒருவகையான உடலைப் பெற்று, பின்னர் மீண்டும் வேறொரு உடலை ஏற்பதற்காக இதனைக் கைவிடுகிறான்
பதம்
9
ஷ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஷனம் ச
ரஸனம் க்ராணம் ஏவ ச
அதிஷ்டாய மனஷ் சாயம்
விஷயான் உபஸேவதே
மொழிபெயர்ப்பு
இவ்வாறு வேறொரு ஸ்தூல உடலைப் பெறும் உயிர்வாழி, மனதை மையமாகக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட விதமான காது, கண், நாக்கு, மூக்கு, தொடு புலன் ஆகியவற்றை அடைகிறான். இதன் மூலம் குறிப்பிட்ட புலனின்ப விஷயங்களை அவன் அனுபவிக்கின்றான்.
பதம்
10
உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி
புஞ்ஜானம் வா குணான்விதம்
விமூடா நானுபஷ்யந்தி
பஷ்யந்தி க்ஞான-சக்ஷுஷ:
மொழிபெயர்ப்பு
முட்டாள்கள், உயிர்வாழி எவ்வாறு தனது உடலைக் கைவிடுகிறான் என்பதையோ, இயற்கை குணங்களின் மயக்கத்தின் கீழ் எத்தகு உடலை அவன் அனுபவித்துக் கொண்டுள்ளான் என்பதையோ புரிந்து கொள்ள முடியாது. ஆனால் யாருடைய கண்கள் ஞானத்தில் பயிற்சி பெற்றுள்ளதோ அவரால் இவை யனைத்தையும் காண முடியும்.
பதம்
11
யதந்தோ யோகினஷ் சைனம்
பஷ்யந்த்-யாத்மன்-யவஸ்திதம்
யதந்தோ (அ)ப்-யக்ருதாத்மானோ
நைனம் பஷ்யந்த-யசேதஸ:
மொழிபெயர்ப்பு
தன்னுணர்வில் நிலைபெற்று முயற்சி செய்யும் ஆன்மீகவாதிகள் இவற்றையெல்லாம் தெளிவாகக் காண முடியும். ஆனால் வளர்ச்சி பெறாத மனமுடையவர்களும் தன்னுணர்வில் நிலை பெறாதவர்களும், முயற்சி செய்தாலும் கூட என்ன நடக்கின்றது என்பதைக் காண இயலாது.
பதம்
12
யத் ஆதித்ய-கதம் தேஜோ
ஜகத் பாஸயதே (அ)கிலம்
யச் சந்த்ரமஸி யச் சாக்னெள
தத் தேஜோ வித்தி மாமகம்
மொழிபெயர்ப்பு
உலகம் முழுவதிலும் இருளை விலக்குகின்ற சூரியனின் பிரகாசம் என்னிடமிருந்தே வருகின்றது. மேலும், சந்திரனின் பிரகாசமும் நெருப்பின் பிரகாசமும் கூட என்னிடமிருந்தே வருகின்றன.
பதம்
13
காம் ஆவிஷ்ய ச பூதானி
தாரயாம்-யஹம் ஒஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா:
ஸோமோ பூத்வா ரஸாத்மக:
மொழிபெயர்ப்பு
நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் நுழைகின்றேன், எனது சக்தியினால் அவை பாதையில் நிலைபெற்றுள்ளன. நான் சந்திரனாகி எல்லாக் காய்கறிகளுக்கும் வாழ்வு ரஸத்தை வழங்குகின்றேன்.
பதம்
14
அஹம் வைஷ்வானரோ பூத்வா
ப்ராணினாம் தேஹம் ஆஷ்ரித:
ப்ராணாபான-ஸமாயுக்த:
பசாம்-யன்னம் சதுர்-விதம்
மொழிபெயர்ப்பு
எல்லா உயிர்வாழிகளின் உடலிலும் ஜீரண நெருப்பாக இருக்கும் நான், உட்சுவாசக் காற்றுடனும் வெளிச்சுவாசக் காற்றுடனும் இணைந்து, நான்கு விதமான உணவைச் செரிக்கச் செய்கிறேன்.
பதம்
15
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச
வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்
மொழிபெயர்ப்பு
நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.
பதம்
16
த்வாவ் இமௌ புருஷௌலோகே
க்ஷரஷ் சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதானி
கூட-ஸ்தோ (அ)க்ஷர உச்யதே
மொழிபெயர்ப்பு
தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் என இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளனர். ஜடவுலகில் உள்ள ஜீவன்கள் தவறக்கூடியவர்கள் என்றும், ஆன்மீக உலகில் உள்ளவர்கள் தவறாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பதம்
17
உத்தம: புருஷஸ் த்வன்ய:
பரமாத்மேத்-யுதாஹ்ருத:
யோ லோக-த்ரயம் ஆவிஷ்ய
பிபர்த்-யவ்யய ஈஷ்வர:
மொழிபெயர்ப்பு
இந்த இருவருக்கும் அப்பாற்பட்டு உத்தம புருஷரான பரமாத்மா இருக்கின்றார்., அழிவற்ற இறைவனான அவர், மூன்று உலகங்களுக்குள் நுழைந்து அவற்றைக் காக்கின்றார்.
பதம்
18
யஸ்மாத் க்ஷரம் (அ)ஹம்
அக்ஷராத் அபி சோத்தம:
அதோ (அ)ஸ்மி லோகே வேதே ச
ப்ரதித: புருஷோத்தம:
மொழிபெயர்ப்பு
தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் ஆகிய இருவருக்கும் அப்பாற்பட்டு நான் திவ்யமானவனாக இருப்பதாலும், நானே உத்தமமானவன் என்பதாலும், உலகிலும் வேதங்களிலும் நான் அந்த புருஷோத்தமனாகக் கொண்டாடப்படுகின்றேன்.
பதம்
19
யோ மாம் ஏவம் அஸம்மூடோ
ஜானாதி புருஷோத்தமம்
ஸ ஸர்வ-வித் பஜதி மாம்
ஸர்வ-பாவேன பாரத
மொழிபெயர்ப்பு
எவனொருவன் என்னை பரம புருஷ பகவானாக ஐயமின்றி அறிகின்றானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான். எனவே, பரதனின் மைந்தனே, அவன் எனது பக்தித் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றான்.
பதம்
20
இதி குஹ்யதமம் ஷாஸ்ரம்
இதம் உக்தம் மயானக
ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத்
க்ருத-க்ருத்யஷ் ச பாரத
மொழிபெயர்ப்பு
வேத சாஸ்திரங்களின் மிகமிக இரகிசயமான பகுதி இதுவே, பாவமற்றவனே, தற்போது என்னால் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் புரிந்துகொள்பவன் அறிஞனாவான், அவனது முயற்சிகள் பக்குவத்தை அறியும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment