பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்





 ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 6

 

பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



இந்த இருபதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பின்வருமாறு: பகவான் வாமனதேவர் தம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்தும், பலி மகாராஜன் அனைத்தையும் அவருக்கு தானமாகக் கொடுத்து விடுகிறார். இவ்வாறாக பகவான் தமது உடலை விரிவடையச் செய்து பகவான் விஷ்ணுவாக ஒரு பிரம்மாண்டமான உருவத்தை ஏற்றார்.

சுக்ராசார்யரின் அறிவுரைகளைக் கேட்டபின், பலி மகாராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார். மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம் ஆகிய கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பஸ்தனின் கடமை என்பதால், பிரம்மச்சாரிக்கு அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது முறையல்ல என்று பலி மகாராஜன் நினைத்தார். ஒரு பிரம்மச்சாரியிடம் பொய் சொல்வதோ அல்லது அவருக்களித்த ஒரு வாக்குறுதியை மதிக்காமல் நடந்து கொள்வதோ ஒருபோதும் முறையல்ல. ஏனெனில் பொய் சொல்வது மிகப்பெரிய பாவமாகும். பொய் பேசும் பாவியொருவனின் பாரத்தை பூமித் தாயாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், பொய் பேசுவதினால் ஏற்படும் பாவ விளைவுகளில் ஒருவன் அச்சம் கொள்ள வேண்டும். ஒரு பேரரசின் அல்லது சாம்ராஜ்யத்தின் பெருக்கம் தற்காலிகமானதே; அதனால் பாமர மக்களுக்கு நன்மை இல்லையெனில், அத்தகைய பெருக்கத்தில் மதிப்பில்லை. முற்காலத்தில், பேரரசர்களும் சக்கரவர்த்திகளும் தங்களது சாம்ராஜ்யங்களைப் பொது ஜனங்களின் நன்மையை கருத்திற் கொண்டு விரிவடையச் செய்தனர். உண்மையில், பொது மக்களின் நன்மைக்குரிய அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில், முதல் தரமான மனிதர்கள் சிலசமயங்களில் தங்களது உயிரையும் கூட தியாகம் செய்துள்ளனர். பெருமை வாய்ந்த செயல்களைச் செய்துள்ள ஒருவர் ஒருபோதும் மடிவதில்லை. அவர் நிரந்தரமாக வாழ்கிறார் என கூறப்படுகிறது. ஆகவே, புகழே வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். நற்புகழ் அடையும் பொருட்டு ஒருவர் மிகவும் ஏழ்மையானவராக ஆகிவிட நேர்ந்தாலும், அது ஓர் இழப்பல்ல. பிரம்மச்சாரியான இந்த வாமனதேவர் பகவான் விஷ்ணுவாகவே இருந்த போதிலும், தான் அளிக்கப் போகும் தானத்தை ஏற்றுக் கொண்டபின் தன்னை அவர் கைது செய்தாலும், அவரிடம் தான் பகைமை பாராட்டப் போவதில்லை என்று பலி மகாராஜன் எண்ணினார். இவ்வெல்லா விஷயங்களைப் பற்றியும் நன்கு யோசித்த பலி மகாராஜன் முடிவில் தம்மிடமிருந்த அனைத்தையும் தானமாகக் கொடுத்து விட்டார்.

பிறகு பகவான் வாமனதேவர் உடனே தம்மை விஸ்வரூபமாக விரிவடையச் செய்தார். பகவான் சர்வ வியாபகம் உள்ளவர் என்பதையும், அனைத்தும் அவரது உடலுக்குள் அடங்கியுள்ளன என்பதையும், வாமனதேவரின் கருணையின் மூலமாக பலி மகாராஜனால் காண முடிந்தது. அந்த ரூபத்தில் பகவான் விஷ்ணு ஒரு கிரீடம், மஞ்சள் நிற ஆடைகள், ஸ்ரீவத்ஸ அடையாளம், கௌஸ்துப மாலை, ஒரு மலர் மாலை ஆகியவற்றை அணிந்து, அவரது உடல் முழுவதும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராக காணப்பட்டார். இந்த ரூபத்தில் தோன்றிய வாமனதேவரை பரம விஷ்ணுவாகவே பலி மகாராஜனால் காண முடிந்தது. பகவான் படிப்படியாக விரிவடைந்து உலகம் முழுவதையும் மூடிவிட்டார். அவரது உடலை விரிவடையச் செய்து ஆகாயம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டார். அவரது கரங்களைக் கொண்டு எல்லாத் திசைகளையும் அவர் நிரப்பி விட்டார். மேலும் அவரது இரண்டாவது அடியால் உயர்கிரக அமைப்பு முழுவதையும் ஆக்கிரமித்தார். ஆகவே மூன்றாவது அடியை வைப்பதற்குக் காலியான இடம் இருக்கவில்லை.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 20 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more